Just In
- 22 min ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 50 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 1 hr ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 3 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
Don't Miss!
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை
உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் பிரபலமான டெஸ்லா, விற்பனை செய்யப்பட்ட அதன் கார்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ளவுள்ளது. எதற்காக டெஸ்லா கார்கள் மீண்டும் திரும்ப அழைக்கப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் டெஸ்லா பிராண்டை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். இந்தியாவில் கார்களை அறிமுகப்படுத்த கடந்த பல மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டுவந்த டெஸ்லா நமது அண்டை நாடான சீனாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது.
இவ்வாறு பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கோலோச்சி வந்தாலும், ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே டெஸ்லாவை ஏகப்பட்ட பிரச்சனைகள் சுற்றி வந்துள்ளன. இந்த வகையில் சமீப காலமாக சிறுசிறு பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட டெஸ்லா கார்கள் பழுது பார்ப்பிற்காக திரும்ப அழைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அவற்றின் தொடர்ச்சியாக, தற்போது விற்பனை செய்யப்பட்ட தனது சுமார் 11 லட்ச வாகனங்களை திரும்ப அழைக்க டெஸ்லா முடிவெத்துள்ளது. இந்த 11 லட்ச டெஸ்லா வாகனங்களில் 2017ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்களும், 2020-2021இல் தயாரிக்கப்பட்ட மாடல் ஒய் கார்களும், 2021-2022இல் தயாரிக்கப்பட்ட மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களும் அடங்குகின்றன.
திரும்ப அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் கார்களில் இரு சரிப்பார்ப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒன்று, கார்களின் ஜன்னல் ரிவர்ஸல் சிஸ்டத்தில் பழுது ஏற்படுகிறதா என்பதும், மற்றொன்று, ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை கண்டறியும் விதத்தில் ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளதும் ஆகும்.
இதில் விண்டோ ரிவர்ஸல் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சனையினால் ஜன்னல் கண்ணாடிகள் ஆட்டோமேட்டிக்காக மேலேறும் போது ஏதேனும் இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதில் சரியாக செயல்படுவதில்லையாம். இத்தகைய பழுதினால் சிறிய பிரச்சனைகளில் இருந்து மிகவும் மோசமான பெரிய அளவிலான பிரச்சனைகள் வரையில் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக டெஸ்லா கருதுகிறது.
ஆட்டோமேட்டிக் விண்டோ ரோல் அப் வசதி ஆனது தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்படும் ஒன்றாக மாறி வருகிறது. இந்த வசதியினால் பயணிகள் அவ்வப்போது ஜன்னல் கண்ணாடிகளை கீழிறக்கி, மேலேற்ற வேண்டிய தேவை இருக்காது. ஜன்னல் கண்ணாடியை மேலேற்றும் போது இடையில் பயணிகளின் கை, விரல்கள் அல்லது வேறு ஏதேனும் பொருள் வந்தால் அதற்கேற்ப செயல்படும் வகையில் இந்த வசதி ஆனது வடிவமைக்கப்படுகிறது.
ஆனால் இந்த தொழிற்நுட்ப வசதி மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தனது எலக்ட்ரிக் கார்களில் முறையாக செயல்படுவதில்லை என்பதை டெஸ்லா சில பல சோதனைகளின் மூலம் கண்டறிந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்யவே இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கை ஆகும். இந்த பிரச்சனையை சாஃப்ட்வேர் அப்டேட்டின் மூலம் தீர்க்க முடியும் என டெஸ்லா நம்புகிறது.
ஏற்கனவே கூறியதுபோல், கடந்த மாதங்களில் இதேபோன்று சில திரும்ப அழைப்பு நடவடிக்கைகளை டெஸ்லா மேற்கொண்டு இருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் ஏற்படும் பிரச்சனைகளாகவே இருந்தன. ஆனால் தற்போது சாஃப்ட்வேர் அப்டேட்டாக இல்லாதததை அறிந்து விற்பனை செய்யப்பட்ட தனது கார்களை டெஸ்லா திரும்ப அழைக்கிறது.
இதுகுறித்த டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் கருத்து தெரிவிக்கையில், எங்களது பெரும்பாலான திரும்ப அழைப்புகள் திரும்ப அழைப்புகளே கிடையாது. இது சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்டே ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த பிரச்சனையினால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நமது அரசாங்கம் டெஸ்லாவை இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட கூறியது எலான் மஸ்க்கிற்கு ஏற்றதாக விளங்கவில்லை. ஆனால், கனடாவில் புதிய மெகா தொழிற்சாலையை நிறுவ டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!