Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை
வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்தமா ஐந்து புதிய கார்கள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நடப்பு 2021-2022 நிதியாண்டிற்குள் இந்திய வாகன சந்தையை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்க சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில், வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஐந்து முக்கிய கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.
கியா கேரன்ஸ் (Kia Carens):
கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம் அதன் புதுமுக எம்பிவி ரக காரான கேரன்ஸ் 7 சீட்டர் காரை வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டன.
இப்பணிகள் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 7 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் தொடங்கின. இது மிக சிறப்பான வரவேற்பிற்கான அறிகுறியாகும். கியா நிறுவனம் கேரன்ஸ் காரை எஸ்பி2 பிளாட்பாரத்தின்கீழே கட்டமைத்திருக்கின்றது. இது மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே கேரன்ஸ் எம்பிவி விற்பனைக்குக் கிடைக்கும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களிலும் இதே மாதிரியான எஞ்ஜினே வழங்கப்படுகின்றது.
கியா கேரன்ஸ் எம்பிவி கார் ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி மற்றும் லக்சூரி ப்ளஸ் ஆகிய தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், எட்டு விதமான நிற தேர்வுகளும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன.
ஃபேஸ்லிஃப்ட் மாருதி பலினோ (Maruti Suzuki Baleno)
மாருதி சுசுகி நிறுவனம் அதன் பலினோ ஹேட்ச்பேக் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் பிப்ரவரி மாதம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே புதிய பலினோவும் தயாரிக்கப்பட இருக்கின்றன.
ஆனால், தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஸ்ட்ராங்கான பலினோவாக புதிய ஒன்று உருவாக இருக்கின்றது. இதற்காக அதிக உறுதியான ஸ்டீல் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதேபோல், அதிக குவாலிட்டியான பாடி பேனல்களும் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, பெரிய மற்றும் ஃப்ரீ ஸ்டாண்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற இருக்கின்றது. இது ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதி மற்றும் இ-சிம் வசதியுடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், கூடுதல் சிறப்பு வசதியாக ஹெட்ஸ்-அப்-டிஸ்ப்ளே, ஆறு ஏர் பேக்குகள் மற்றும் புதிய உட்புறம் உள்ளிட்டவையும் பேஸ்ஃலிப்ட் பலினோவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia)
நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் ஸ்லேவியா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய செக் நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன், மார்ச் மாதத்திற்குள் டெலிவரி பணிகளை தொடங்க இருப்பதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் மிக சமீபத்திலேயே தொடங்கப்பட்டது.
ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏஓ ஐஎன் பிளாட்பாரத்தை பயன்படுத்தி கட்டமைத்திருக்கின்றது. இதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த கார்களை தழுவிய ஓர் வாகனமாக ஸ்லேவியா காட்சியளிக்கின்றது.
ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ட்ரிம்களில் ஸ்கோடா ஸ்லேவியா எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக்டீவ், ஆம்பிசன் மற்றும் ஸ்டைல் ஆகிய தேர்வுகளிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.
ஃபேஸ்லிஃப்ட் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)
இந்தியாவின் பிரபலமான மின்சார கார் மாடல்களில் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி காரும் ஒன்று. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு புதிய அம்சங்கள் இக்காரில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் புதிய அம்சமாக 51 kWh பேட்டரி பேக், ஒற்றை சார்ஜில் 480 ரேஞ்ஜ் வழங்கும் வகையில் வழங்கப்பட இருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் எம்ஜி இசட்எஸ் இவி காரில் 44.5 kWh பேட்டரி பேக் மற்றும் 419 கிமீ ரேஞ்ஜ் திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பேட்டரி பேக் மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களையும் மாற்றியமைக்க எம்ஜி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், புதிய 10.1 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களே இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், அஸ்டர் காரில் வழங்கப்பட்டிருப்பதைப் போன்று ஏஐ அசிஸ்டண்ட் மற்றும் அடாஸ் தொழில்நுட்ப அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux)
உலக அளவில் மிகவும் ஃபேமஸாக காட்சியளிக்கும் காராக டொயோட்டாவின் ஹைலக்ஸ் இருக்கின்றது. பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளுதல் என இரு விதமான பயன்பாட்டு வசதிகளைக் கொண்டதே இக்காரின் தனி சிறப்பு. இத்தகைய வாகனத்தையே டொயோட்டா நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் வெளியீடு செய்தது.
வெளியீட்டைத் தொடர்ந்து புக்கிங் பணிகளையும் நிறுவனம் விற்பனையாளர்கள் வாயிலாக தொடங்கியிருக்கின்றது. இதன் டெலிவரி பணிகளை வரும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவும் திட்டமிட்டிருக்கின்றது. இந்த மாதமே டொயோட்டா ஹைலக்ஸ் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் பின்னரே இக்காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கப்படும்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்