Just In
- 20 min ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 51 min ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 2 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 2 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
Don't Miss!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Movies Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா
ஹோண்டா கார் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 7,834 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து நடப்பாண்டு ஜூன் மாதம் 2,502 கார்களை ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ஹோண்டா நிறுவனம் வெறும் 4,767 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 7,834 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 64 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரண்டு மடங்காக மாறியுள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெறும் 1,241 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 2,502 ஆக உயர்ந்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் ஜாஸ் (Honda Jazz), அமேஸ் (Honda Amaze), டபிள்யூஆர்-வி (Honda WR-V) மற்றும் சிட்டி (Honda City) போன்ற கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சிட்டி காரின் ஹைப்ரிட் (Honda City Hybrid) மாடலை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி (Honda City e:HEV) என்ற பெயரில், இந்த ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைந்து செயல்படும்.
இவை ஒருங்கிணைந்து, அதிகபட்சமாக 125 பிஹெச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார், ஒரு லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹைப்ரிட் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். அப்போது இந்த காரின் பல்வேறு அம்சங்கள் எங்களை ஈர்த்தன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரியும் கூட சமீபத்தில் புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாகவே ஊக்கப்படுத்தி கொண்டுள்ளார்.
அவரது அமைச்சரகம் எடுத்து வரும் பல்வேறு தீவிர முயற்சிகளின் காரணமாக இந்தியாவில் தற்போது மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியுடன், காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை பிரபலமாக்குவதுடன், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்புகளை அதிகரிப்பதற்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக குளோபல் என்சிஏபி அமைப்பை போல், கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்குவதற்கு, பாரத் என்சிஏபி என்ற அமைப்பிற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!