Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
எலெக்ட்ரிக் வாகனத்தில் உச்சபட்ச ரேஞ்ஜை பெறுவது எப்படி?.. டாடா மோட்டார்ஸ் வழங்கும் தரமான வழிக்காட்டுதல்!
எலெக்ட்ரிக் காரில் ரேஞ்ஜை அதிகரிப்பதற்கான வழிக்காட்டுதல்களை டாடா வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு நெக்ஸான் இவி காரே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்தியர்களிடத்தில் அமோக வரவேற்பைப் பெற்று வரும் காராக இது இருக்கின்றது. இந்த கார் நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் என இருவிதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இவற்றுடன் சேர்த்து டிகோர் இவி மற்றும் டியாகோ இவி (லேட்டஸ்ட் அறிமுகம்) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் இன்னும் சில எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியிலும் அது களமிறங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான வேலையில், டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் கார்களில் அதிக தூரம் பயணிப்பது எப்படி என்பதற்கான வழிக்காட்டுதல்களை வழங்கியிருக்கின்றது.
அதாவது, ஓலெக்ட்ரிக் காரின் உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெறுவது எப்படி என்பதற்கான டிப்ஸை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிறுவனம் வழிகாட்டியிருக்கும் தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாமா?
எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ஜை அதிகரிப்பதற்கான ஐந்து முக்கியமான காரணிகளையே டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது. ஈகோ மற்றும் பிற நார்மலான மோட்களை பயன்படுத்த வேண்டும். வேகத்தை மணிக்கு 80 கிமீ வரையில் மட்டுமே மெயின்டெயின் செய்ய வேண்டும். ஸ்போர்ட் மோடில் பயணிக்கும்போது நல்ல உற்சாகமான அனுபவத்தை எலெக்ட்ரிக் கார் வழங்கும்.
ஆனால், ரேஞ்ஜ் திறன் கடுமையாக பாதிக்கும். ஒன் பெடல் டிரைவிங் மற்றும் லைட் ரைட் ஃபூட் யுக்தியைக் கையாள்வதன் வாயிலாகவும் ரேஞ்ஜை கணிசமாக அதிகரிக்க முடியும் என டாடா தெரிவித்துள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பயன்படுத்துவதன் வாயிலாகவும் கணிசமான அளவு ரேஞ்ஜை அதிகரிக்க முடியும்.
இந்த சிஸ்டம் வாகனத்தின் முடுக்கம் அல்லது பிரேக்கிங்கின்போது இயக்க ஆற்றலை மாற்றி மின்சார ஆற்றலாக மாற்றும். இதனை அவ்வப்போது செய்வதன் வாயிலாக கணிசமாக பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இதன் வாயிலாக ரேஞ்ஜை கணிசமாக மீட்டெடுக்க முடியும்.
ஏசி-யை பயன்படுத்துவதிலும் சிக்கனம் தேவை. உங்கள் வாகனத்தின் ஏர் கண்டிஷனரை 24-26 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தும்போது அதன் மின்சார நுகர்வு கணிசமாக குறையும். இதன் வாயிலாக லேசாக எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறனை அதிகரிக்க செய்ய முடியும் என டாடா கூறுகின்றது. இதேபோல் டயரில் போதுமான அளவு காற்றை வைத்திருப்பதன் வாயிலாகவும் நல்ல ரேஞ்ஜை எலெக்ட்ரிக் வாகனத்தில் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகையால், டயர்களில் போதுமான அளவு எப்போது காற்றை வைத்திருப்பது அவசியம். இதைக் கண்கானிக்கவே நவீன கால கார்களில் வாகன உற்பத்தியாளர்கள் டயர் பிரஷ்ஷர் மாணிட்டரை வழங்குகின்றனர். இதேபோல், தேவையில்லாத அல்லது ஆஃப்டர் மார்க்கெட் (அங்கீகரிக்கப்படாத) மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும். இவை அதிகளவில் பேட்டரியின் மின்சார திறனை உறிஞ்சக் கூடும்.
மேலே குறிப்பிட்ட வழிக்காட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக கணிசமான அளவு பேட்டரி ரேஞ்ஜை அதிகரிக்கச் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் அதன் அதிகாரப்பூர்வ வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது டாடா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மின்சார கார் பயன்பாட்டாளர்களுக்கான அறிவுரைகளை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் மிக சமீபத்தில் உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை பற்றிதான் கூறிக் கொண்டிருக்கின்றோம். இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 8.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த குறைவான விலையில் டியாகோ இவி-யை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!