Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டாடாவோட தயாரிப்புனா சும்மாவா! தமிழகத்தை போல் டாடா மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிய மாநிலம்!
தமிழகத்தைப் போல் மற்றுமொரு மாநில அரசு அதிக எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த துறைக்காக, எத்தனை மின்சார கார்கள் வாங்கப்பட்டுள்ளன, அவற்றின் விலை என்ன என்பது பற்றிய கூடுதல் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மின் வாகனங்கள் இந்தியாவில் அபரிதமான வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசு துறைகளிடம் இருந்தும் அதற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் கார்களை தமிழக அரசு, அரசின் உயர் பொருப்பில் உள்ள அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வாங்கியது.
இதற்காக 25 யூனிட்டுகள் டாடா டிகோர் இவி மின்சார கார்கள் வாங்கப்பட்டன. 3.42 கோடி ரூபாய் செலவில் இந்த கார்கள் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இந்த கொள்முதலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவின் மற்றுமொரு மாநில அரசு டாடாவின் விலையுயர்ந்த மின்சார கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கியிருக்கின்றது.
மேற்கு வங்கமே அந்த மாநில அரசு ஆகும். அது, கொல்கத்தாவின் காவல்துறைக்காக 17 நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார்களை வாங்கியிருக்கின்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டை தூய்மையாக்கும் முயற்சியாக காவல்துறை பயன்பாட்டில் இந்த மின்சார கார்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கொல்கத்தா காவல்துறையின் வசம் கணிசமான அளவில் மின்சார கார்கள் பன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே மேலும் சில எலெக்ட்ரிக் கார்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், கொல்கத்தா காவல்துறையிடம் இருக்கும் இ-கார்களின் எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது.
மின்சார கார்கள் போலீஸ் வாகனம் என்பதால் அது வழக்கத்திற்கு மாறாக காட்சியளிக்கின்றது. அதாவது, போலீஸ் எனும் எழுத்துக்கள், சைரன் மற்றும் ஃபிளாஷர்களுடன் அக்கார் காட்சியளிக்கின்றது. இவற்றையே அடுத்த 8 ஆண்டுகளுக்கு கொல்கத்தா காவல்துறை பயன்படுத்த இருக்கின்றது.
ஆம், தற்போது வாங்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் 8 ஆண்டுகள் லீஸ் திட்டத்தின்கீழ் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய-மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கணிசமான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், சமீபத்தில் மேற்கு வங்க மாநில அரசும் அதன் மின் வாகன கொள்கையை அறிவித்தது. இரண்டு மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் ரத்து, மோட்டார் வாகன வரி மற்றும் இதர வரிகளும் ரத்து செய்யப்படுவதாக அது அறிவித்தது.
மின் வாகனங்களுக்கு மட்டுமின்றி சிஎன்ஜி வாகனங்களுக்கும் இதுமாதிரியான சிறப்பு சலுகைகளை மாநில அரசு அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு சலுகைகள் நடப்பாண்டு 1 ஏப்ரல் தொடங்கி 2024 மார்ச் 31 வரையில் நடைமுறையில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
எவ்வளவு செலவில் மின்சார கார்களை மேற்கு வங்க அரசு வாங்கியுள்ளது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. இதன் ஆரம்ப விலையே ரூ. 17.74 லட்சம் ஆகும். இதன் அப்டேட்டட் வெர்ஷனை நெக்ஸான் இவி மேக்ஸ் எனும் பெயரில் டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது அதிகபட்சமாக 437 கிமீ ரேஞ்ஜை முழு சார்ஜில் வழங்கும்.
ஆனால், வழக்கமான நெக்ஸான் இவி ஓர் முழு சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 3.3 kW பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை அதிக வேக சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 0-80 சதவீதம் சார்ஜை ஏற்ற வெறும் 56 நிமிடங்களே போதும்.
இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரையே மேற்கு வங்கம் மாநில அரசு தற்போது காவல்துறை பயன்பாட்டிற்காக வாங்கியிருக்கின்றது. இதே மின்சார வாகனத்தையே கேரளா போன்ற பிற மாநில அரசுகளும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...