Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
150 ரூபா செலவில் 300 கிமீ பயணிக்கலாம்... விவசாயியின் மகன் உருவாக்கிய அசத்தலான கார்... விரைவில் விற்பனைக்கு!
150 ரூபா செலவு பண்ணினா 300 கிமீ பயணிக்கும் ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்திய விவசாயி ஒருவரின் மகன் உருவாக்கியிருக்கின்றார். இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் மிக அதிகம் மைலேஜ் தரும் கார்களாக மாருதி சுஸுகி செலிரியோ, கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்டவை இருக்கின்றன. செலிரியோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.24 கிமீ தொடங்கி 26.68 கிமீ வரையிலும், டொயோட்டா ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா கார்கள் 28 கிமீ வரையிலும் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றன.
இந்த அனைத்து கார்களுக்கம் டஃப் கொடுக்கும் ஓர் காரை இந்தியாவைச் சேர்ந்த விவசாயியின் மகன் ஒருவர் உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கியிருக்கும் அந்த கார் வெறும் ரூ. 150 செலவில் 300 கிமீ மைலேஜை தரும் என அவர் கூறியிருக்கின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்சல் நக்ஷன்.
இவரே தனது வீட்டில் வைத்து ரூ. 150 செலவில் 300 கிமீ மைலேஜை தரக் கூடிய காரை உருவாக்கியவர் ஆவார். காற்று மாசை ஏற்படுத்தாத ஹைட்ரஜனால் இயங்கும் காரையே அவர் உருவாக்கியிருக்கின்றார். எம்-டெக் பட்டதாரியான இவர் தன்னுடைய நண்பர் குணால் அஸ்துகர் உதவியுடன் இந்த காரை உருவாக்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரூ. 25 லட்சம் செலவில் இந்த காரை தனது சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஹர்சல் கூறியிருக்கின்றார். இன்னும் இந்த காரின் உருவாக்க பணிகள் முடிவடையாத நிலையே தென்படுகின்றது. இருப்பினும், இப்போதே அக்கார் வழங்க இருக்கும் பலன்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, அவர் இணைய சேவை வழங்குபவராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இதற்கிடையிலேயே நண்பரின் உதவியுடன் ஹைட்ரஜன் காரை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த காரை அதிகம் மைலேஜ் தரும் வாகனமாக மட்டுமின்றி ஆட்டோமேட்டிக்காக இயங்கும் வகையிலும் அவர் உருவாக்கி வருகின்றார். இதன் காரணத்தினாலேயே பெரும் தொகை இக்காருக்கு செலவாகியிருக்கின்றது.
இந்த காரை எதிர்காலத்தில் விற்பனைக்காக உருவாக்கவும் இருப்பதாக அவர் திட்டமிட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக சுமார் 100 யூனிட்டுகளையாவது உற்பத்தி செய்ய இருக்கின்றார் ஹர்சல். ஆனால், இது எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படும், என்ன மாதிரியான புதிய அம்சங்களுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.
அதேவேலையில், தற்போதைய நிலவரப்படி இக்காரை சிசர் ரக டூர்கள், சன்ரூஃப், அட்டானமஸ் டிரைவிங் அம்சம் மற்றும் பல அம்சங்களுடன் இக்காரை அவர் உருவாக்கி வருகின்றார். இத்தகைய சிறப்புகள் கொண்ட வாகனமாகவே விவசாயியின் மகன் ஹர்சல் உருவாக்கி வரும் கார் வெகு விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. மேலும், இதற்கான புக்கிங்குகளையும் ஏஐகார்ஸ் (AiCars.in) எனும் தளத்தின் வாயிலாக அவர்கள் ஏற்க தொடங்கியிருக்கின்றனர்.
உரிய அனுமதிகள் பெற்ற பின்னரே இக்கார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒன்று லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 94.24-க்கும் விற்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் வெறும் 150 ரூபாய் செலவில் தங்களுடைய இந்த கார் 300 கிமீ வரை செல்ல உதவும் என ஹர்சல் தெரிவித்திருக்கின்றார்.
இதன் விளைவாக மைலேஜை அதிகம் விரும்பும் இந்தியர்கள் இந்த காரின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கியிருக்கின்றனர். பொதுவாகவே இந்தியர்கள் மத்தியில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது மாருதி சுஸுகி செலிரியோ, கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்கள் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, சமீபத்திய அறிமுகமான மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் கார்களுக்கு புக்கிங் மிக அமோகமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த இரு கார்களும் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் அவரவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!