Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உண்மையில் 3ஆக பிரிகிறதா மஹிந்திரா அண்ட் மஹிந்திரா?.. மனம் திறந்த மஹிந்திரா குழுமம்.. என்னதான் சொல்றாங்க!
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra And Mahindra) வாகன உற்பத்தி பிரிவு மூன்றாக பிரிய இருப்பது உண்மையா?, அதிகாரப்பூர்வ தகவலை மஹிந்திரா குழுமம் (Mahindra Group) வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவை தாயகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (Mahindra And Mahindra)-வும் ஒன்று. இந்நிறுவனம் மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) ஓர் முக்கிய அங்கமாகும். இந்த முக்கிய அங்கத்தை அண்மையில் மூன்றாக மஹிந்திரா குரூப் பிரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, நிறுவனம் தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பிராண்டின் கீழ், மின்வாகனங்கள், விவசாயம் சார்ந்து பயன்படும் டிராக்டர் போன்ற உபகரணங்கள், இத்துடன் பயணிகள் மற்றும் வர்த்தக பிரிவிற்கான வாகனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வாகன உற்பத்தி பணிகளையே மஹிந்திரா குழுமம் வெவ்வேறு மூன்று விதமான பிராண்டுகளின் கீழ் பிரித்து வரும் காலத்தில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மஹிந்திரா குழுமம் வெளியிடவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பிராண்டை மூன்றாக பிரிக்கும் எண்ணம் நிறுவனத்திற்கு இல்லை என்கிற தகவலே அது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நிறுவனத்திற்கு வாகன வணிகத்தை மூன்று அலகுகளாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதனை பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என மஹிந்திரா குழுமம் கருதுகின்றது" என அது தெரிவித்திருக்கின்றது.
இத்தகவலின் வாயிலாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மூன்றாக பிரியப்போவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மஹிந்திரா குழுமம் பன்முக தொழில்துறையில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அதிக வருவாயை நிறுவனத்திற்கு ஈட்டி தரும் பிரிவாக ஆட்டோமொபைல்ஸ் துறை இருக்கின்றது. எனவேதான் இதனை மறு சீரமைக்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், இதன் அடிப்படையில் மூன்று பிராண்டுகளாக அவை பிரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த அதிகாரப்பூர்வமற்றது என்கிற தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது. நிறுவனத்திற்கு 55 சதவீதம் வருவாயை ஈட்டு தரும் பிரிவாக மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் ஆட்டோமொபைல்ஸ் துறை இருந்து வருகின்றது. இதனை இரட்டிப்பாக்கும் முயற்சிகளை ஏற்கனவே மஹிந்திரா தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இதன் அடிப்படையில் ஏற்கனவே சில புதுமுக தயாரிப்பு பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. அத்துடன், சில அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், வெகு விரைவில் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஸ்கார்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் அதிக இட வசதி, புதிய சிறப்பம்சங்கள், கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல வியக்க வைக்கும் அம்சங்களுடன் ஸ்கார்பியோ இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுதவிர, மூன்று புதுமுக எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றின் வெளியீடு வெகு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் அந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் டீசர் படங்களையும், அவற்றில் இடம் பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இவ்வாறு இந்திய சந்தையை அதகளப்படுத்தும் பணிகளில் மஹிந்திரா மிக ஆயத்தமாக களமிறங்கியிருக்கின்றது. அதேவேலையில், மஹிந்திரா நிறுவனம் அடாம் எனும் குவாட்ரிசைக்கிள் ரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.
இந்த வாகனம்குறித்த தகவல்கள் வெகு நாட்களாக வெளிவராதநிலையில், மிக சமீபத்தில் அதுகுறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது, இரு விதமான பேட்டரி பேக் மற்றும் நான்கு விதமான வேரியண்டுகள் ஆகியவற்றில் மஹிந்திரா அடாம் விற்பனைக்கு வர இருப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகின. மஹிந்திரா அடாம் இந்தியாவில் வர்த்தக வாகன பிரிவிற்காக உருவாக்கப்பட்ட வரும் பிரத்யேக வாகனம் ஆகும். ஆகையால், இதனை தனி நபர் பயன்பாட்டிற்கு பெற இயலாது.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!