Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!
மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், அதாவது நடப்பு மாத இறுதிக்குள், 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விடுவோம் என மஹிந்திரா நிறுவனம் வாக்குறுதி வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்த வாக்குறுதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது.
ஏற்கனவே கூறியபடி தனது வாக்குறுதியை மஹிந்திரா நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (இன்று) மஹிந்திரா நிறுவனம் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இத்தனைக்கும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக திணறி வரும் நேரத்தில், மஹிந்திரா நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி சமயத்திலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. இதன் காரணமாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் விரைவுபடுத்தியது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்டது.
முதல் நாளில் வெறும் 57 நிமிடங்களிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக 25 ஆயிரம் முன்பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனைதான். இதற்கு மறுநாள், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காருக்கு மீண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றது.
அக்டோபர் 8ம் தேதி வெறும் 2 மணி நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன. அதாவது வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது.
இதன்பின் முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்யும் பணிகளை தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் பேர் முன்பதிவு செய்திருப்பதுதான் இந்த நீண்ட காத்திருப்பு காலத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அருமையாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், அதிநவீன வசதிகளையும் பெற்றுள்ளது. மேலும் சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது.
அத்துடன் மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாகவும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 திகழ்கிறது. இதுவரை 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளன.
இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் ஒன்றாகும். இதுதவிர டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் இதே மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்திருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை ஸ்கோர்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.