Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!
மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், அதாவது நடப்பு மாத இறுதிக்குள், 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விடுவோம் என மஹிந்திரா நிறுவனம் வாக்குறுதி வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்த வாக்குறுதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது.
ஏற்கனவே கூறியபடி தனது வாக்குறுதியை மஹிந்திரா நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (இன்று) மஹிந்திரா நிறுவனம் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இத்தனைக்கும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக திணறி வரும் நேரத்தில், மஹிந்திரா நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி சமயத்திலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. இதன் காரணமாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் விரைவுபடுத்தியது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்டது.
முதல் நாளில் வெறும் 57 நிமிடங்களிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக 25 ஆயிரம் முன்பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனைதான். இதற்கு மறுநாள், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காருக்கு மீண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றது.
அக்டோபர் 8ம் தேதி வெறும் 2 மணி நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன. அதாவது வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது.
இதன்பின் முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்யும் பணிகளை தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் பேர் முன்பதிவு செய்திருப்பதுதான் இந்த நீண்ட காத்திருப்பு காலத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அருமையாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், அதிநவீன வசதிகளையும் பெற்றுள்ளது. மேலும் சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது.
அத்துடன் மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாகவும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 திகழ்கிறது. இதுவரை 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளன.
இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் ஒன்றாகும். இதுதவிர டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் இதே மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்திருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை ஸ்கோர்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்