Just In
- 48 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாருதி சுஸுகி ரயில்களை பயன்படுத்தி எத்தனை கார்களை அனுப்பியிருக்கு தெரியுமா? இதுலயும் மாருதிதான் முதல் இடமா?..
கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேத் துறையை பயன்படுத்தி மாருதி சுஸுகி நிறுவனம் பிரமாண்ட அளவில் புதிய வாகனங்களை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதியின் தயாரிப்புகள் எப்போதும் முதல் இடத்தைப் பிடித்துவிடுகின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியன் ரயில்வே துறையைப் பயன்படுத்தி புதிய வாகனங்களை டீலர்களுக்கு அனுப்பி வைப்பதிலும் இந்த நிறுவனமே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் நிறுவனம் 2.33 லட்சம் யூனிட் வாகனங்களை இந்தியன் ரயில்வேவைப் பயன்படுத்தி அனுப்பி வைத்திருக்கின்றது.
இது கடந்த எட்டு ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக அதிகளவிலான வெளியேற்றுதல் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனமே இந்தியன் ரயில்வேவைப் பயன்படுத்தி கார்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதியைப் பெற்ற முதல் நிறுவனம் ஆகும். இது கடந்த 2013 ஆம் ஆண்டில் வாகனங்களை ரயில்களை பயன்படுத்தி வெளியேற்றி வருகின்றது.
நிறுவனத்திடம் அதிக வேகத்தில் செல்லக் கூடிய மற்றும் உயர் திறன் கொண்ட ஆட்டோ வேகன் ரேக்குகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் 41 ரயில்வே ரேக்குகள் அதனிடத்தில் உள்ளன. ஒவ்வொரு ரேக்குகளிலும் சுமார் 300 வாகனங்களை ஏற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழலிலேயே சென்ற நிதியாண்டில் அதிகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்து மாருதி சுஸுகி சாதனைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகளவில் இம்முறை வாகனங்களை அனுப்பி வைத்திருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரயில் பயன்பாட்டினால் முற்றிலுமாக 174 மில்லியன் எரிபொருள் பயன்பாட்டை ஒழிக்க முடிந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தனை பிரமாண்ட எண்ணிக்கையிலான வாகனங்களை டிரக் வாயிலாக ஏற்றுமதி செய்திருந்தால் 1.56 லட்சம் ட்ரக்குகள் தேவைப்பட்டிருக்கும்.
மேலும், இவற்றை இயக்க பெரும் பொருட் செலவும் ஏற்பட்டிருக்கும். இவையனைத்தையும் மாருதி சுஸுகி தற்போது தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக பெருமளவிலான கார்பன் வாயு வெளிப்பாடும் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனித்தகுந்தது.
உலகிற்கே பெருத்த அச்சுறுத்தலாக காற்று மாசுபாடு மாறியிருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மின் வாகன பயன்பாட்டை பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு மாற்றாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியன் ரயில்வே துறையை பயன்படுத்தி மாருதி சுஸுகி சூப்பரான காரியத்தைச் செய்திருக்கின்றது. இந்தியாவில் இன்னும் சில நிறுவனங்களும் இந்தியன் ரயில்வே துறையை பயன்படுத்தி வாகனங்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரயில்வேதுறை அமைச்சகம் இதுமாதிரியான செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் விதமாக வாகன உற்பத்தியாளர்களுக்கு கணிசமான சலுகைகளை வழங்கி வருகின்றது. அது, நிறுவனங்களுக்கு கூடுதல் லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், பல நிறுவனங்கள் இந்திய ரயில்வேவை தங்களின் பொருட்களை ஓர் இடத்தில் மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைப்பதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!