Just In
- 35 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
கொஞ்சம் பெட்ரோல் போதும்... மாருதி தயாரிக்கப்போகும் இ85 ரக பெட்ரோல் இன்ஜின்.... இது செம ஐடியாவா இருக்கே...
மாருதி நிறுவனம் இ85 ரக பெட்ரோல் இன்ஜினை தயாரிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அடுத்தாண்டு இ20 ரக பெட்ரோல் இன்ஜின் தயாரிக்கப்படவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது. தற்போது வரை பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்குள் இ20 எனப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்குத் தகுந்தார் போல் இனி வாகன தயாரிப்பாளர்களை அதற்குத் தகுந்த இன்ஜின்களை தயார் செய்ய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாருதி நிறுவனம் தற்போது இ85 எனப்படும் 85 சதவீதம் எத்தனால் கலந்த இன்ஜினை தயாரிக்கத் தீவிர முயற்சி நடந்து வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையான ஹரியானா மாநிலம் ரோதாக்கில் உள்ள ஆலையில் உள்ள ஆய்வு மற்றும் மேம்பட்டு துறையில் மீடியா டூர் நடத்தப்பட்டது. இந்தநிகழ்வின் போது அந்நிறுவனம் தலைமை தொழிற்நுட்ப அதிகாரி சிவி ராமன் ஊடகத்தினரிடையே பேசினார்.
அப்பொழுது அவர் "நாங்கள் இ20 ரக இன்ஜின்களை வரும் 2023ம் ஏப்ரல் மாதம் முதல் தயாரிக்கத் துவங்கிவிடுவோம். இது போகத் தனியாக ஃபிளக்ஸி ஃப்யூயல் இன்ஜினாக இ85 ரக இன்ஜினையும் தயாரிக்க ஆய்வு செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
தற்போது இந்தியாவில் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு முழுமையாக பெட்ரோலால் ஓடும் இன்ஜினிலேயே சாத்தியமாகியுள்ளது. 20 சதவீதம் வரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் சாத்தியப்படுத்திவிடலாம். ஆனால் அதன் மைலேஜ் மற்றும் சில விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டியது. இருக்கும்.
அதனால் தற்போது நேரடியாக இ20 வகை பெட்ரோலிலேயே இயங்கும் வகையில் தற்போது அவர்கள் வைத்திருக்கும் இன்ஜினை ட்யூன் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் மாருதி நிறுவனம் இ85 பெட்ரோலுக்கான இன்ஜினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிகம் எத்தனால் கலப்பதால் தற்போது உள்ள இன்ஜினில் உள்ள பல விஷயங்களை மாற்ற வேண்டியது இருக்கும்.
இன்ஜின் இசியூ, இன்ஜெக்ஷன், இக்னீஷியன் ஆகிய இ85 ரக பெட்ரோலுக்கு ஒட்டு வராது இ85 ரக பெட்ரோல் தயாரிக்கப்பட்டால் அது குறைந்த கலோரிஃபிக் பெட்ரோலாக இருக்கும் குறைந்த கலோரிஃபிக் பெட்ரோலை பொருத்தவரை அதற்கான எந்த தொழிற்நுட்பம் சிறந்ததாக இருக்கும் என ஆய்வுகள் தான் தற்போது நடந்து வருகிறது.
இது போக மாருதி நிறுவனம் இ85 ரக பெட்ரோலை தயாரித்தாலும் அதற்காக மைலேஜை குறைக்க நினைக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான மைலேஜூடன் இ85 பெட்ரோலை தயாரிக்கத் தீவிரமான முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையில் பிஸ்6 தரக் கட்டப்பாடுகளுடன் இந்த இன்ஜினை தயாரிப்பது என்பது சற்று சவாலான விஷயம் தான்.
இதற்கிடையில் மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. 2025தனது முதல் எலெக்ட்ரிக்காரை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. அதே போல தற்போது மாருதி நிறுவனத்தில் தான் அதிகமான சிஎன்ஜி கார்களும் இருக்கின்றனர். இது போக பயோ சிஎன்ஜி குறித்தும் இந்நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பிறகு அரசு ஃபிளக்ஸி ஃப்யூயல் வாகனங்களை அதிகம் விற்பனை செய்யத் துவங்கிவிட்டது. அதனால் தான் பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. தற்போது வரை இ20 பெட்ரோலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியால் விவசாயமும் வளர்ச்சியடையும் விவசாய கழிவுகளிலிருந்து தான் எத்தனால் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு