Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொஞ்சம் பெட்ரோல் போதும்... மாருதி தயாரிக்கப்போகும் இ85 ரக பெட்ரோல் இன்ஜின்.... இது செம ஐடியாவா இருக்கே...
மாருதி நிறுவனம் இ85 ரக பெட்ரோல் இன்ஜினை தயாரிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அடுத்தாண்டு இ20 ரக பெட்ரோல் இன்ஜின் தயாரிக்கப்படவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது. தற்போது வரை பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்குள் இ20 எனப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்குத் தகுந்தார் போல் இனி வாகன தயாரிப்பாளர்களை அதற்குத் தகுந்த இன்ஜின்களை தயார் செய்ய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாருதி நிறுவனம் தற்போது இ85 எனப்படும் 85 சதவீதம் எத்தனால் கலந்த இன்ஜினை தயாரிக்கத் தீவிர முயற்சி நடந்து வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையான ஹரியானா மாநிலம் ரோதாக்கில் உள்ள ஆலையில் உள்ள ஆய்வு மற்றும் மேம்பட்டு துறையில் மீடியா டூர் நடத்தப்பட்டது. இந்தநிகழ்வின் போது அந்நிறுவனம் தலைமை தொழிற்நுட்ப அதிகாரி சிவி ராமன் ஊடகத்தினரிடையே பேசினார்.
அப்பொழுது அவர் "நாங்கள் இ20 ரக இன்ஜின்களை வரும் 2023ம் ஏப்ரல் மாதம் முதல் தயாரிக்கத் துவங்கிவிடுவோம். இது போகத் தனியாக ஃபிளக்ஸி ஃப்யூயல் இன்ஜினாக இ85 ரக இன்ஜினையும் தயாரிக்க ஆய்வு செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
தற்போது இந்தியாவில் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு முழுமையாக பெட்ரோலால் ஓடும் இன்ஜினிலேயே சாத்தியமாகியுள்ளது. 20 சதவீதம் வரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் சாத்தியப்படுத்திவிடலாம். ஆனால் அதன் மைலேஜ் மற்றும் சில விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டியது. இருக்கும்.
அதனால் தற்போது நேரடியாக இ20 வகை பெட்ரோலிலேயே இயங்கும் வகையில் தற்போது அவர்கள் வைத்திருக்கும் இன்ஜினை ட்யூன் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் மாருதி நிறுவனம் இ85 பெட்ரோலுக்கான இன்ஜினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிகம் எத்தனால் கலப்பதால் தற்போது உள்ள இன்ஜினில் உள்ள பல விஷயங்களை மாற்ற வேண்டியது இருக்கும்.
இன்ஜின் இசியூ, இன்ஜெக்ஷன், இக்னீஷியன் ஆகிய இ85 ரக பெட்ரோலுக்கு ஒட்டு வராது இ85 ரக பெட்ரோல் தயாரிக்கப்பட்டால் அது குறைந்த கலோரிஃபிக் பெட்ரோலாக இருக்கும் குறைந்த கலோரிஃபிக் பெட்ரோலை பொருத்தவரை அதற்கான எந்த தொழிற்நுட்பம் சிறந்ததாக இருக்கும் என ஆய்வுகள் தான் தற்போது நடந்து வருகிறது.
இது போக மாருதி நிறுவனம் இ85 ரக பெட்ரோலை தயாரித்தாலும் அதற்காக மைலேஜை குறைக்க நினைக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான மைலேஜூடன் இ85 பெட்ரோலை தயாரிக்கத் தீவிரமான முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையில் பிஸ்6 தரக் கட்டப்பாடுகளுடன் இந்த இன்ஜினை தயாரிப்பது என்பது சற்று சவாலான விஷயம் தான்.
இதற்கிடையில் மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. 2025தனது முதல் எலெக்ட்ரிக்காரை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. அதே போல தற்போது மாருதி நிறுவனத்தில் தான் அதிகமான சிஎன்ஜி கார்களும் இருக்கின்றனர். இது போக பயோ சிஎன்ஜி குறித்தும் இந்நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பிறகு அரசு ஃபிளக்ஸி ஃப்யூயல் வாகனங்களை அதிகம் விற்பனை செய்யத் துவங்கிவிட்டது. அதனால் தான் பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. தற்போது வரை இ20 பெட்ரோலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியால் விவசாயமும் வளர்ச்சியடையும் விவசாய கழிவுகளிலிருந்து தான் எத்தனால் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!