Just In
- 36 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காரை அழகாக்கிய ஒரே காரணத்திற்காக அபராதம் விதித்த நீதிமன்றம்... எவ்வளவுனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க?
காரை அழகாக மாற்றிய ஒற்றை காரணத்திற்காக அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பன்முக மோட்டார் வாகன சட்ட பிரிவுகளில் 'பிரிவு 52' -ம் ஒன்று. வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை தன்மைக்கு எதிராக மாற்றப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த பிரிவே வழி வகை செய்கின்றது.
இப்பிரிவின் வாயிலாகவே மிகவும் அழகாக மாற்றப்பட்ட மஹிந்திரா தார் கார் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. ஜம்மு அண்ட் கஷ்மீரைச் சேர்ந்தவர் ஜாஹித் இக்பால் வாணி. இவர் தன்னுடைய மஹிந்திரா தார் காரை அழகானதாக மாற்றும் விதமாக அண்மையில் மாடிஃபிகேஷன் செய்திருக்கின்றார்.
ஆனால், இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதனைச் சுட்டிக் காட்டிய ஜம்மு அண்ட் கஷ்மீர் நீதிமன்றம், வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தது. வாகனத்தின் தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகள் பதிவு சான்றில் இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு மாற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட தார் காரின் படம்
நீதிமன்றம் அதன் தீர்ப்பில், "முன்னதாக வாகன ஓட்டி மீது எந்தவொரு போக்குவரத்து விதமீற்களுக்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை பரிசீலித்து அவருக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்படுகின்றது. இதனை செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளது.
தொடர்ந்து, வாகனத்தை உண்மையான தோற்றத்திற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூடுதல் சிறப்பு மொபைல் மாஜிஸ்திரேட் அவரது உத்தரவில், "அனைத்து மாற்றங்களும் நீக்கப்பட்டு, வாகனம் அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்" என்றார்.
நீதிமன்றங்களின் இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர் ஜாஹித் இக்பால் வாணிக்கு பல மடங்கு செலவீணத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாதிரியான காரணங்களுக்காகதான் வாகன மாடிஃபிகேஷன் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இருப்பினும், பலர் தங்களின் வாகனங்கள் பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும், அவை அழகானதாக இருக்க வேண்டும் என கூறிக் கொண்டு பல லட்சங்களை செலவிட்டு மாடிஃபை செய்கின்றனர். கடைசியில் இந்த செயல்கள் அவர்களுக்கே பல மடங்கு தலைவலியை ஏற்படுத்திவிடுகின்றன. இதற்கு உதராணமாகவே இந்த சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.
வாகனத்தை அழகாக்கி தரும் வேலையை வாகன உற்பத்தியாளர்கள் செய்து வருகின்றனர். அதாவது, அவை விற்பனைக்குக் கொண்டு வரும் வாகனங்களுக்கு அவையே சிறப்பு அலங்காரப் பொருட்களையும் விற்பனைக்கு வழங்குகின்றனர். இவற்றைக் கொண்டு வாகனங்களை அலங்கரிக்கும் பட்சத்தில் எந்தவித நடவடிக்கையும் போக்குவரத்துத் துறையால் எடுக்கப்படாது.
ஏனெனில் வாகன உற்பத்தி நிறுவனம் வழங்கும் மாற்றங்கள் அனைத்தும் பதிவு சான்றில் பதிவிடப்படும். அத்துடன், அரசின் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து மாற்றங்களையும் நிறுவனங்கள் வழங்கும். ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் அக்ஸசெரீஸ்கள் அனைத்து வகையிலும் பாதுகாப்பானதாக இருக்கும்.
அதேவேலையில், உருவத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாத கணிசமான அப்டேட்டுகளுக்கு மோட்டார் வாகன சட்டம் அனுமதி வழங்குகின்றது. அதாவது, டயரை மாற்றுதல், வைப்பர் மாற்றுதல் மற்றும் பம்பரின் முனைப் பகுதியில் சிராய்ப்பு ஏற்படாத வண்ணம் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!