Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 8 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவசரப்பட்டு இப்போ வாங்கிடாதீங்க... ஒரு ஆண்டிற்குள் விலை குறைய போகுதாம்... சூப்பரான தகவலை வெளியிட்ட அமைச்சர்!
இன்னும் ஓராண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மாற இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. தொடர்ந்து பலர் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அவற்றின் விலை ஒரு சிலருக்கு மிகுந்த சவாலானதாக இருக்கின்றது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் மின்சார கார்கள் பல மடங்கு அதிக விலையில் விற்பனைக்குக் கிடைப்பதை நம்மால் காண முடிகின்றது.
இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் என்று அழைக்கப்படும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) -யின் ஆரம்ப மாடலின் விலையே ரூ. 12.49 லட்சமாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு அதிகமானதாக இருக்கின்றது. அதாவது, பல லட்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது.
ஆகையால், இந்தியர்கள் பலருக்கு எட்டாக் கனியாக எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன. இந்த சூழ்நிலையைக் களையும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், மின்சார வாகனங்களின் விலை தற்போதும் உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல் பல மடங்கு குறைய இருப்பதாக கூறியிருக்கின்றார். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறுவது முதல் முறையல்ல. அவர் இதற்கு முன்பாகவும் இதுபோல் கூறியிருக்கின்றார். இரண்டு முறை வரை மின்சார வாகனங்களின் விலை குறைய இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார்.
ஆனால், இதுவரை எந்த மாற்றமும் அவற்றின் விலையில் ஏற்படவில்லை. இந்த நிலையிலேயே மீண்டும் ஒரு முறை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக நிதின் கட்காரி அறிவித்திருக்கின்றார். மேலும், இந்த நிகழ்வு அடுத்த ஆண்டிற்குள் நிகழ்ந்துவிடும் என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
மத்திய அமைச்சரின் இந்த தகவல் மின்வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "மின்சார வாகனங்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நான் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு வருடத்திற்குள், மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமானதாக இருக்கும். இதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவு பெருமளவில் மிச்சப்படுத்தப்படும்" என்றார்.
இவ்வாறு நிதின் கட்காரி கடந்த 2021ம் ஆண்டிலும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தங்களுடைய அரசு மின்சார வாகனங்களின் விலையை குறைப்பதில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய தகவலை அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார்.
தற்போது இந்திய சந்தையில் மிக மிக குறைவான விலைக் கொண்ட காராக மாருதி சுஸுகி ஆல்டோ இருக்கின்றது. இது ரூ. 3.39 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய குறைவான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
அதேவேலையில், அரசின் முயற்சியால் ரூ. 6 லட்சம் அல்லது ரூ. 7 லட்சம் அல்லது அதற்கும் மேலான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய குறைவான விலைக்கு எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தியர்கள் பலர் இருக்கின்றனர்.
எனவே மலிவு விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வரும் எனில் இந்திய சாலைகள் முழுக்க மின்சார வாகனங்கள் ஆளுகை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போதைய நிலவரப்படி இந்திய மின்வாகன பிரிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே ஆளுகை செய்துக் கொண்டிருந்தது.
இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி மின்சார காருக்கு சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 14.79 லட்சமாக இருக்கின்ற நிலையிலும் இந்தியர்கள் இக்காருக்கு சூப்பரான வரவேற்பை வழங்கி வருகின்றனர். இக்காரின் அதிகம் ரேஞ்ஜ் தரும் வெர்ஷன் நெக்ஸான் இவி மேக்ஸ் ரூ. 17.74 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்க தொடங்கியிருக்கின்றது. இந்த வாகனமும் மக்களை சிறப்பாக கவர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Source: auto economictimes
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!