ஜாம்பவான் நிறுவனம் டாடாவின் தயாரிப்புகள் இனி பூட்டானிலும் விற்பனைக்கு கிடைக்கும்! எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் புகழ் பெற்ற கார் மாடல்கள் சிலவற்றை பூட்டானில் விற்பனைக்குக் களமிறக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அதன் புதிய தலைமுறை கார் மாடல்களை நமது அண்டை நாடான பூட்டானில் விற்பனைக்கு களமிறக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களான டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), நெக்ஸான் (Nexon), ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய கார் மாடல்களே பூட்டானில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

இவற்றில் பெரும்பாலானவை மிக அதிக பாதுகாப்பான கார் மாடல்களாகும். அதிலும், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவை அதீத பாதுகாப்பான கார்களாக காட்சியளிக்கின்றன. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை இவை பெற்றிருக்கின்றன.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

இவற்றை போலவே டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களும் அதிக பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றவையாக இருக்கின்றன. இவை 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற கார்களாகும். இத்தகைய பாதுகாப்பான கார் மாடல்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூட்டானில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

சேம்தன் வெஹிக்கிள்ஸ் (Samden Vehicles) எனும் பூட்டானை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாகவே அனைத்து கார் மாடல்களையும் அந்நாட்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது. இந்த இந்திய தயாரிப்புகள் பாதுகாப்பானவை மட்டுமல்ல அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றன.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

ஆகையால், இந்த இந்திய தயாரிப்புகள் நம் நாட்டிற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அனைத்து கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வரும் கார் மாடல்களாக இருக்கின்றன.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

அதிலும் ஹாரியர், சஃபாரி மற்றும் நெக்ஸான் எஸ்யூவி கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இதே வரவேற்பை இந்த கார்கள் பூட்டானிலும் பெறும் என நம்பப்படுகின்றது. பூட்டானில் கால் தடம் பதித்தது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் பிரிவின் தலைவரான மாயனக் பல்டி தன்னுடைய கருத்துகளை முன் வைத்திருக்கின்றார்.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

அவர், "எங்கள் வளர்ச்சி கொள்கையின் முக்கிய அங்கமாக பூட்டான் வருகை அமைந்திருக்கின்றது. எங்களின் புதிய தலைமுறை பிஎஸ்-VI பயணிகள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பூட்டானில் நல்ல இடத்தை விரைவில் பெறுவோம் என நாங்கள் நம்புகின்றோம்" என்றார்.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

டாடா மோட்டார்ஸ் மிக சமீபத்தில் அதன் புகழ்பெற்ற டிகோர், டியாகோ ஆகிய கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஐசிஎன்ஜி எனும் பெயரில் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். இவற்றின் அறிமுகத்தைத் தொடர்ந்து மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் டாடா சஃபாரி டார்க் எடிசன் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

இதுமட்டுமின்றி இன்னும் சில கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனக்குக் களமிறக்க இருக்கின்றது. அந்தவகையில், மிக விரைவில் டாடா சியாரா எலெக்ட்ரிக் காரை டாடா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகள் இனி பூட்டானில் விற்பனைக்கு கிடைக்கும்... எல்லாமே பாதுகாப்பான கார்கள்!

ஏற்கனவே டாடா நிறுவனம் இந்தியாவில் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. இதில், டிகோர் இவி எலெக்ட்ரிக் காரே நாட்டின் மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் காராகும். ரூ. 11.99 லட்சம் என்ற விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த மின்சார கார்களின் வரிசையிலேயே மிக விரைவில் சியாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது அதிக பிரீமியம் தர வசதிகளுடன் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், பன்முக புதிய தொழில்நுட்ப அம்சங்களும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata launches pv s range in bhutan with samden vehicles private limited join venture
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X