Just In
- 6 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 36 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 3வது முறையாக 'பல்க்' ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார் நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்களை மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பஸ்கள் போன்ற வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு, 715க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் பஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சப்ளை செய்துள்ளது.
அந்த பஸ்கள் ஒட்டுமொத்தமாக 40 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்துள்ளன. அதாவது 4 கோடி கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக அந்த எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கியுள்ளன. தொடர்ந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டும் வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்தும் எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
இந்த வரிசையில் பிஎம்டிசி எனப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திடம் (BMTC - Bengaluru Metropolitan Transport Corporation) இருந்து தற்போது மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிஎம்டிசி-க்கு, 921 எலெக்ட்ரிக் பஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சப்ளை செய்யவுள்ளது.
இந்த மிகப்பெரிய ஆர்டரை வென்றிருக்கும் தகவலை தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இப்படி எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டர்களை கைப்பற்றுவது இது முதல் முறையல்ல. வெகு சமீபத்தில் கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 2 மிகப்பெரிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
இதன்படி டிடிசி எனப்படும் டெல்லி போக்குவரத்து கழகத்திடம் (DTC - Delhi Transport Corporation) இருந்து 1,500 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் வென்றிருந்தது. அதேபோல் டபிள்யூபிடிசி எனப்படும் மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திடம் (WBTC - West Bengal Transport Corporation) இருந்தும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
இதன்படி மேற்கு வங்க போக்குவரத்து கழகத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,180 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்யவுள்ளது. இந்த வரிசையில் வெகு சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த 3வது மிகப்பெரிய எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டராக தற்போதைய பிஎம்டிசி-யின் ஆர்டர் உள்ளது. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் இதேபோல் பல்வேறு பெரிய ஆர்டர்களை வெல்லலாம்.
இதுகுறித்து பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனரான சத்யவதி ஐஏஎஸ் கூறுகையில், ''சுற்றுச்சூழலுக்கு நட்பான பொது போக்குவரத்திற்கு அதிக பயணிகளை ஈர்க்கும் வகையில், அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்களை சேர்ப்பதில் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் மகிழ்ச்சியடைகிறது'' என்றார்.
அதேபோல் இந்த சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் பஸ்கள் பெங்களூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்கள், எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக இருப்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்து காட்டுகின்றன.
அரசு நிர்வாக அளவில் மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வர்த்தக எலெக்ட்ரிக் வாகனங்களை போல், பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்களிலும், அதாவது எலெக்ட்ரிக் கார்களிலும் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ்தான். டாடா அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும் இன்னும் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்கவும், புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் முயற்சி செய்து வருகின்றன.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?