Just In
- 19 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை பட்டைய கௌப்புது... தீபாவளிக்கு நீங்களும் ஒன்னு வாங்கி போடுங்க!
டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 47,655 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இரண்டு இடங்களில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 2,145 கார்கள் மட்டுமே. கடந்த சில மாதங்களாகவே ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா நிறுவனத்திற்கும் இடையே 2வது இடத்தை பிடிப்பது யார்? என்ற போட்டி நிலவி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் சிறிய வித்தியாசத்தின் மூலம் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. சிறிய வித்தியாசத்தின் காரணமாக 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்திடம் பறிகொடுத்திருந்தாலும் கூட, விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 25,729 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 47,655 ஆக உயர்ந்துள்ளது. இது 85.2 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய இரண்டு கார்களும் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டாடா நிறுவனம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெக்ஸான் மற்றும் பன்ச் கார்களை (ஒட்டுமொத்தமாக) விற்பனை செய்துள்ளது. தனித்தனியாக பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 14,518 நெக்ஸான் கார்களையும், 12,251 பன்ச் கார்களையும் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்த செப்டம்பர் மாதம் 26,769 நெக்ஸான் மற்றும் பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார்கள் ஆகும். இந்த இரண்டு கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.
டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரையில் டாடா நெக்ஸான் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மறுபக்கம் டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய இரண்டு கார்களிலும் ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய 2 கார்களையும் வெற்றிகரமான தயாரிப்புகளாக மாற்றியுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கூடிய விரைவில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெகு சமீபத்தில் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.