Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!
இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் மாதம் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
Recommended Video
இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)
இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜூலை மாதம்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி விலைகள் அறிவிக்கப்பட்டு, இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
எனவே டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவோ அல்லது டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.
டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. சுஸுகி நிறுவனத்தின் க்ளோபல்-சி பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி 2 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள க்ராண்ட் விட்டாரா எஸ்யூவி காரை, மாருதி சுஸுகி நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி ஆன்லைன் மூலமாகவோ அல்லது நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாகவோ மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்பா, ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் என மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மொத்தம் 6 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் ஆகிய 2 வேரியண்ட்களில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்படும். அதே நேரத்தில் மற்ற 4 வேரியண்ட்களிலும், சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படும்.
வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஏசி, 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகள் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் இடம்பெறவுள்ளன.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா எஸ்யூவி காரும், 2 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய 2 கார்களும், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400)
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400. நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு பின்பு ஒரு வழியாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் செப்டம்பர் 6ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
இது ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் நீளம் 3,995 மிமீ ஆக உள்ளது. ஆனால் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.2 மீட்டர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ரேஞ்ச் 400 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களாக இருக்கலாம். அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி கிடைக்கும்.