Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் ஒன்று வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தைக்கு 2022ம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட அனைத்து வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் உடனடியாக விற்று தீர்ந்துள்ளன. வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தைக்கு நடப்பு 2022ம் ஆண்டிற்காக 150 எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை ஒதுக்கீடு செய்தது. இந்த புதிய காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 2 மணி நேரத்திற்கு உள்ளாக 150 கார்களும் விற்று தீர்ந்து விட்டன.
இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். இதற்கு முன்பாக ஐசி இன்ஜின் கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், முதல் முறையாக எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில், இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வால்வோ நிறுவனம் நேற்றுதான் (ஜூலை 26) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
2022ம் ஆண்டிற்கு இந்திய சந்தைக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், வால்வோ நிறுவனம் தொடர்ந்து, இந்த காருக்கு முன்பதிவுகளை ஏற்று கொண்டுதான் உள்ளது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் மாதம்தான் தொடங்கப்படவுள்ளது.
அக்டோபர் மாதம் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டாலும், தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ள 150 எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களையும் நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விட வேண்டும் என வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிறகு, மேற்கொண்டு முன்பதிவு செய்பவர்களுக்கு எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது வரும் 2023ம் ஆண்டில் கார்கள் டெலிவரி செய்யப்படும். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிகப்பெரிய பெருமை ஒன்றை தன்வசப்படுத்தியுள்ளது. இதுதான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் ஆகும். கர்நாடக மாநிலம் பெங்களூர் நகருக்கு அருகே உள்ள ஒசகோட்டையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில்தான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் அசெம்பிள் செய்யப்படவுள்ளன.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 78kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 408 பிஹெச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 418 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
150kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 28 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்காக வாடிக்கையாளர்கள் மிக நீண்ட காலமாக காத்திருந்தனர்.
ஆம், இப்போது விற்பனைக்கு வந்து விடும், அப்போது விற்பனைக்கு வந்து விடும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஒரு வழியாக தற்போதுதான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒரு வழியாக விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், ''வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காருக்காக எங்கள் வாடிக்கையாளர்களின் மிக நீண்ட கால காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்து விட்டது. வெறும் 2 மணி நேரங்களில் முன்பதிவுகளை வாரி வழங்கியிருப்பது, வாடிக்கையாளர்கள் வால்வோ இந்தியா கார்ஸ் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது'' என்றார்.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் 55.90 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் என்ற முன்பதிவு தொகையுடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கு வால்வோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (ஜூலை 27) முன்பதிவுகள் தொடங்கப்பட்டன.
முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 2 மணி நேரத்திற்கு உள்ளாக இந்தியாவிற்கு நடப்பு 2022ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 150 வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்திய சந்தையில், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிக முக்கியமான போட்டியாளராக இருக்கும்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!