Just In
- 30 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்! உண்மையை கேட்டு உச்சு கொட்டும் மக்கள்!
இளைஞர் ஒருவர் அவரது ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பிம்டபிள்யூ (BMW) சொகுசு காரை ஆற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் விலையுயர்ந்த சொகுசு கார் மாடல்களில் எக்ஸ்6 (X6) மாடலும் ஒன்று. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஒரு கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன் ரோடில் இதன் விலை ஒன்றரை கோடியை தாண்டும்.
இது ஓர் சொகுசு அம்சங்கள் நிரப்பப்பட்ட எஸ்யூவி ரக காராகும். இக்காரை சிபியூ வாயிலாக பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. எனவேதான் இதன் விலை மிக மிக அதிகமானதாக இருக்கின்றது. இந்த கார் அதிக திறன் வாய்ந்த காரும்கூட. இக்காரில் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வெறும் 5.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், சிபிசி, டிஎஸ்சி, டிடிசி, எலெக்ட்ரிக் ஹேண்ட் பிரேக் என பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய விலையுயர்ந்த சூப்பரான சொகுசு காரையே பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றில் தள்ளிவிட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராமவாசிகள் விபத்து அரங்கேறியிருப்பதாக கருதி அச்சமடைந்தனர்.
தொடர்ந்து, கார் ஒன்று ஆற்றிற்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த மீனவ மக்கள் சிலரின் உதவியுடன் காரை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினர்.
முதலில் காரில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என ஆய்வு செய்தனர். நல்ல வேலையாக அக்காரில் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்ததில் பெங்களூருவில் உள்ள மஹாலக்ஷ்மி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஓர் செல்வந்தருக்கு சொந்தமான கார் அது என்பது தெரிய வந்தது.
Source: times of india
அவரை விசாரித்ததில் போதியளவு தகவல் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரித்ததில், சமீபத்தில் சொகுசு கார் உரிமையாளரின் தாய் இறந்தது தெரியவந்தது. இந்த நிகழ்வு அவரை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றது.
மேலும், தாயின் பிரிவு அவரை மிகுந்த மன உளைச்சலுடன் அலைய வைத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் சொகுசு காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்டிருக்கின்றார். தாயை பிரிந்த விரக்தியில் அவரை இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இந்த நிகழ்வுகுறித்த இன்னும் தெளிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேலையில், யாரும் வழக்கு தொடராத காரணத்தினால் சொகுசு காரின் உரிமையாளர் மீது எந்த வழக்கு பதியப்படாமல் காவல்துறை விடுவித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஸ்ரீரங்கபட்னா பகுதியில் அரங்கேறிய இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. செல்வந்தர், தாய் மீது இந்தளவு பாசம் வச்சிருந்திருக்காரே என பலரையும் புலம்ப செய்திருக்கின்றது.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!