Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது இந்திய தயாரிப்புக்கு மேலும் பெருமையாச்சே!! அமெரிக்க சாலைகளில் இயங்கவுள்ள மற்றொரு இந்திய மாருதி கார்...
மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கும் குறிப்பிட்ட மாடல் கார் சமீபத்தில் இருந்து லத்தீன் அமெரிக்க நாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் சென்னைக்கு அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்தில் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்கப்பட உள்ள அந்த மாருதி சுஸுகி கார் எது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி விளங்குவது உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடந்த பல வருடங்களாக நம் நாட்டு மக்களின் நம்பிக்கை மிகுந்த கார் பிராண்டாக விளங்கும் இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 3 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 2 ஹரியானா மாநிலத்தில் உள்ளன. 1 தொழிற்சாலை முழுவதும் சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமாக குஜராத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மாருதி சுஸுகி கார்கள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அருகாமையில் இருப்பதால் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் பெரும்பாலும் மாருதி சுஸுகி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் நமது சென்னையில் உள்ள துறைமுகங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு. அவ்வாறு தான் தற்போது, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி கார் ஒன்று சென்னைக்கு அருகே எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மாருதி சுஸுகி கார் வேறு எதுவுமில்லை, கிராண்ட் விட்டாரா தான். காம்பெக்ட் எஸ்யூவி ரக காராக களமிறக்கப்பட்டுள்ள கிராண்ட் விட்டாரா கார்களை லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, ஆப்பிரிக்க & மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பணிகளை துவங்கியுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உண்மையில் இந்திய தயாரிப்புகளுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு பெருமை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான ஹிசாஷி டகேயூசி கூறுகையில், "இந்தியாவில் இருந்து ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உந்துதல் உடன் சர்வதேச சந்தையில் கால்தடத்தை விரிவாக்கம் செய்ய மாருதி சுஸுகி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஏற்றுமதி செய்யும் தயாரிப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெற்றிக்கான முக்கிய தூண்களுள் ஒன்றாகும். கிராண்ட் விட்டாராவை இணைத்திருப்பதன் மூலம் நாங்கள் ஏற்றுமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கிராண்ட் விட்டாரா 2022 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டு சந்தையில் இந்த காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போன்றதான வெற்றியை வெளிநாட்டு சந்தைகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கிராண்ட் விட்டாரா கார் பெறும் என்று நம்புகிறோம்" என்றார். இந்தியாவில் விற்பனையில் மாருதி கிராண்ட் விட்டாரா காருக்கு டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 முக்கிய போட்டி மாடலாக விளங்குகின்றன. தற்போதைக்கு 5-இருக்கை தேர்வில் மட்டுமே கிடைக்கும் கிராண்ட் விட்டாராவை விரைவில் 7-இருக்கை தேர்வில் கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வது மட்டுமின்றி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் மாருதி சுஸுகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2.6 லட்ச கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை இந்த 2023 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் முனைப்பில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது.
இந்தியாவில் பயணிகள் கார்கள் ஏற்றுமதியில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் முக்கிய போட்டி நிறுவனமாக விளங்குகிறது. தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் கடந்த 2022ஆம் ஆண்டில் 1.48 லட்ச கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களை காட்டிலும் 13.7% அதிகமாகும்.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு