Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...
பிஸியான சாலையில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கார் ஓட்டி சென்றான். அவனது வயதை கேட்டு போலீசாரே ஷாக் ஆகி விட்டனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் பொது சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் குற்றமாக உள்ளது. இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெறுவதற்கு உரிய வயதை எட்டுவதற்கு முன்பே ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட ஊக்குவிக்கின்றனர்.
மைனர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்த ஏராளமான பெற்றோர்களுக்கு கடந்த ஆண்டு சிறை தண்டனை கூட வழங்கப்பட்டது.
உரிய வயதை எட்டி லைசென்ஸ் வாங்காத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது. ஆனால் இதன் அபாயத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது கிடையாது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட, தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்டும்படி அவர்கள் ஊக்குவிக்கின்றனர். இந்த சூழலில் ஐதராபாத் நகரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் நகரில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி சென்றுள்ளான். இந்த சம்பவத்தை அவ்வழியாக பயணித்த சக வாகன ஓட்டி ஒருவர் கேமராவில் ரெக்கார்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, டைகர் நீலேஷ் என்பவரால் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரின் அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road-ORR) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற சரியான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றையும் டைகர் நீலேஷ் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 8ம் தேதி காலை 9.32 மணியளவில் நடைபெற்றுள்ளது.
டைகர் நீலேஷ் அதே டிவிட்டில் ஐதராபாத் டிராபிக் மற்றும் மாநகர போலீசாரையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோவில் மாருதி சுஸுகி ஆல்டோ காரை சிறுவன் ஒருவன் ஓட்டி செல்வதை காண முடிகிறது. கார் ஓட்டிய சிறுவனுக்கு சுமார் 10 வயதுதான் இருக்கும் எனவும் டைகர் நீலேஷ் கூறியுள்ளார். உண்மையில் இந்த வயதில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது.
சிறுவனம் கார் ஓட்டி சென்றபோது, காருக்குள் மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அச்சிறுவனின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது. டைகர் நீலேஷின் இந்த டிவிட்டிற்கு குஷாய்குடா டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் பதில் அளித்துள்ளது. இதில், அந்த வாகனத்திற்கு எதிராக இ-சலான் ஜெனரேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட ஆன்லைன் அபராத ரசீதுகளையும் போலீசார் அப்லோட் செய்துள்ளனர். ஆனால் பொது சாலையில் மைனர் சிறுவன் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தொடர்பாக போலீசார் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேபோல் ரசீதின்படி, போலீசார் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளனர். உத்தரவுகளுக்கு கீழ்படியாமைக்காக 500 ரூபாய், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 1,000 ரூபாய் மற்றும் மைனர் வாகனம் ஓட்டியதற்காக 500 ரூபாய் என ஒட்டுமொத்தமாக வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்காத வரை, இது போன்ற சம்பவங்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டேதான் இருக்க போகிறோம். இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!