Just In
- 4 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 6 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 6 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- 8 hrs ago இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...
பிஸியான சாலையில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கார் ஓட்டி சென்றான். அவனது வயதை கேட்டு போலீசாரே ஷாக் ஆகி விட்டனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் பொது சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் குற்றமாக உள்ளது. இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெறுவதற்கு உரிய வயதை எட்டுவதற்கு முன்பே ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட ஊக்குவிக்கின்றனர்.
மைனர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்த ஏராளமான பெற்றோர்களுக்கு கடந்த ஆண்டு சிறை தண்டனை கூட வழங்கப்பட்டது.
உரிய வயதை எட்டி லைசென்ஸ் வாங்காத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது. ஆனால் இதன் அபாயத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது கிடையாது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட, தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்டும்படி அவர்கள் ஊக்குவிக்கின்றனர். இந்த சூழலில் ஐதராபாத் நகரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் நகரில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி சென்றுள்ளான். இந்த சம்பவத்தை அவ்வழியாக பயணித்த சக வாகன ஓட்டி ஒருவர் கேமராவில் ரெக்கார்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, டைகர் நீலேஷ் என்பவரால் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரின் அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road-ORR) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற சரியான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றையும் டைகர் நீலேஷ் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 8ம் தேதி காலை 9.32 மணியளவில் நடைபெற்றுள்ளது.
டைகர் நீலேஷ் அதே டிவிட்டில் ஐதராபாத் டிராபிக் மற்றும் மாநகர போலீசாரையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோவில் மாருதி சுஸுகி ஆல்டோ காரை சிறுவன் ஒருவன் ஓட்டி செல்வதை காண முடிகிறது. கார் ஓட்டிய சிறுவனுக்கு சுமார் 10 வயதுதான் இருக்கும் எனவும் டைகர் நீலேஷ் கூறியுள்ளார். உண்மையில் இந்த வயதில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது.
சிறுவனம் கார் ஓட்டி சென்றபோது, காருக்குள் மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அச்சிறுவனின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது. டைகர் நீலேஷின் இந்த டிவிட்டிற்கு குஷாய்குடா டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் பதில் அளித்துள்ளது. இதில், அந்த வாகனத்திற்கு எதிராக இ-சலான் ஜெனரேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட ஆன்லைன் அபராத ரசீதுகளையும் போலீசார் அப்லோட் செய்துள்ளனர். ஆனால் பொது சாலையில் மைனர் சிறுவன் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தொடர்பாக போலீசார் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேபோல் ரசீதின்படி, போலீசார் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளனர். உத்தரவுகளுக்கு கீழ்படியாமைக்காக 500 ரூபாய், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 1,000 ரூபாய் மற்றும் மைனர் வாகனம் ஓட்டியதற்காக 500 ரூபாய் என ஒட்டுமொத்தமாக வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்காத வரை, இது போன்ற சம்பவங்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டேதான் இருக்க போகிறோம். இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
-
இந்தியாவின் முதல் தங்க நிறம் கொண்ட ஸ்கார்பியோ!.. இந்த கலரும் அதுக்கு செம்ம எடுப்பா இருக்கு!
-
மிக மிக காஸ்ட்லியான காரை வாங்கிய யுட்யூபர்! சீக்கிரமே வேலைய விட்டுட்டு யுட்யூப் சேனல ஆரம்பிச்சுட வேண்டியதுதான்