Just In
- 14 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 39 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...
பிஸியான சாலையில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கார் ஓட்டி சென்றான். அவனது வயதை கேட்டு போலீசாரே ஷாக் ஆகி விட்டனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் பொது சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் குற்றமாக உள்ளது. இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெறுவதற்கு உரிய வயதை எட்டுவதற்கு முன்பே ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட ஊக்குவிக்கின்றனர்.
மைனர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்த ஏராளமான பெற்றோர்களுக்கு கடந்த ஆண்டு சிறை தண்டனை கூட வழங்கப்பட்டது.
உரிய வயதை எட்டி லைசென்ஸ் வாங்காத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது. ஆனால் இதன் அபாயத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது கிடையாது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட, தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்டும்படி அவர்கள் ஊக்குவிக்கின்றனர். இந்த சூழலில் ஐதராபாத் நகரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் நகரில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி சென்றுள்ளான். இந்த சம்பவத்தை அவ்வழியாக பயணித்த சக வாகன ஓட்டி ஒருவர் கேமராவில் ரெக்கார்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, டைகர் நீலேஷ் என்பவரால் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரின் அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road-ORR) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற சரியான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றையும் டைகர் நீலேஷ் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 8ம் தேதி காலை 9.32 மணியளவில் நடைபெற்றுள்ளது.
டைகர் நீலேஷ் அதே டிவிட்டில் ஐதராபாத் டிராபிக் மற்றும் மாநகர போலீசாரையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோவில் மாருதி சுஸுகி ஆல்டோ காரை சிறுவன் ஒருவன் ஓட்டி செல்வதை காண முடிகிறது. கார் ஓட்டிய சிறுவனுக்கு சுமார் 10 வயதுதான் இருக்கும் எனவும் டைகர் நீலேஷ் கூறியுள்ளார். உண்மையில் இந்த வயதில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது.
சிறுவனம் கார் ஓட்டி சென்றபோது, காருக்குள் மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அச்சிறுவனின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது. டைகர் நீலேஷின் இந்த டிவிட்டிற்கு குஷாய்குடா டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் பதில் அளித்துள்ளது. இதில், அந்த வாகனத்திற்கு எதிராக இ-சலான் ஜெனரேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட ஆன்லைன் அபராத ரசீதுகளையும் போலீசார் அப்லோட் செய்துள்ளனர். ஆனால் பொது சாலையில் மைனர் சிறுவன் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தொடர்பாக போலீசார் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேபோல் ரசீதின்படி, போலீசார் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளனர். உத்தரவுகளுக்கு கீழ்படியாமைக்காக 500 ரூபாய், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 1,000 ரூபாய் மற்றும் மைனர் வாகனம் ஓட்டியதற்காக 500 ரூபாய் என ஒட்டுமொத்தமாக வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்காத வரை, இது போன்ற சம்பவங்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டேதான் இருக்க போகிறோம். இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!