Just In
- 23 min ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 1 hr ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 2 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 2 hrs ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
Don't Miss!
- Lifestyle திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Movies Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொதுசாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
பொது சாலையில் பத்து வயது சிறுவன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தற்போதைய தலைமுறையினர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் விதமாக, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அதனை ஸ்மார்ட்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களான முகப்புத்தகம், டுவிட்டர், யுடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்டவற்றில் பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் பதிவிடுவதன்மூலம் பிரபலமடைவதுடன் சில, அவலங்களையும் சந்திக்கின்றனர். அவ்வாறு, ஆர்வலக்கோளாரில் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு ஆபத்தாக அல்லது பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. அந்த வகையில், அண்மையில், காவல்நிலையம் முன்பாக, கெத்தாக வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், ஓடும் ரயிலில் கிகி சேலஞ்ச் செய்தவர்கள் உட்பட பலர் இதுபோன்ற தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பத்து வயது சிறுவன் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா காரை தனியாக இயக்கிச் செல்வதுப் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் காரின் பதிவெண்ணைக் கண்டால், இந்த சம்பவமானது கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியிருப்பது தெரியவருகிறது.
வீடியோவில், வீட்டை விட்டு வெளியே வரும் சிறுவனுக்கு ஓர் சிறுமி கார் சாவியைத் தூக்கி எறிகிறாள். அதனை கேட்ச் பிடித்த சிறுவன், அந்த சிறுமியுடன் இணைந்து வெளியே வருகிறார். பின்னர், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் வெள்ளை நிற க்ரெட்டா காரை சிறுவன் தனியாக வெளியே ஓட்டிச் செல்கிறார். மேலும், அப்படியே, அந்தக் காரைக் கொண்டு மற்ற வாகனங்கள் செல்லும் பொதுவெளியில் இயக்கிச் செல்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தையும் வேறொரு நபர் வீடியோவாக காட்சிப்படுத்துகிறார். மேலும், இந்த வீடியோவுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் உள்ளிட்ட சில சிறப்புகளைச் சேர்த்து யுடியூப் பக்கத்தில் '10 வயது சிறுவன் காரை இயக்கும் வீடியோ' என்ற கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். சுமார் 2 நிமிடங்கள் 14 விநாடிகள் செல்லும் இந்த வீடியோக் காட்சியினை 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இதுபோன்று, சிறுவர்கள் வாகனத்தை இயக்கியதால் பல்வேறு விபத்துகள் இதற்கு முன்னதாக அரங்கேறியுள்ளன. ஆகையால், சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அவர்களது பெற்றோர்களுக்குத் தான் தண்டனை வழங்கப்படும் என புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோன்று, சாலையில் வாகனத்தை இயக்கிச் சென்ற சிறுவர்களின் பெற்றோர்களுக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்று பத்து வயது சிறுவனை வைத்து காரை இயக்கும் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், அந்த சிறுவன் மிகவும் குறுகலான சாலையில் எதிர்புறங்களில் பல வாகனங்கள் வருகின்ற சூழலில் இயக்குவது, அந்த வீடியோவைப் பார்க்கும் நமக்கே சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால், இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அந்த வீடியோவை எடுத்த நபர் வீண் விளம்பரத்திற்காக பெரும் ஆபத்தான காரியத்தை செய்துள்ளார். ஒரு வேளை சிறுவன் சற்று தடுமாறியிருந்தால் என்னவாகி இருக்கும் என்பதே அந்த வீடியோவைப் பார்க்கும் பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
அந்த வீடியோவில் சிறுவன் ஓட்டி வரும் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடலாகும். இந்த கார் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு ஏற்ப ஒரு பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.
பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 151என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இதேபோன்று, இந்த கார் 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த காரின் மற்றொரு 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது. இந்த க்ரெட்டா கார் ரூ.9.43 லட்சத்தில் இருந்து ரூ.15.03 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது.
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!