Just In
- 29 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 37 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புள்ளிங்கோவை குறி வைக்கும் போலீஸ்... 12 இளைஞர்கள் அதிரடியாக சுற்றி வளைப்பு... எதற்காக தெரியுமா..?
புள்ளிங்கோ இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
சமீபகாலமாக பலர் வாய்களில் அடிபடும் வார்த்தையாக 'புள்ளிங்கோ' இருக்கின்றது. ஏன், விவாத மேடைகள்கூட இந்த பெயரை ஓர் தலைப்பாக வைத்து நடைபெற்றுள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'பிகில்' திரைப்படத்தின் மூலும் இவ்வார்த்தை உலகளவில் டிரெண்டாகியுள்ளன.
மிகவும் வித்தியாசமாக தங்களுக்கு பிடித்த மாதிரியான, பளீரென்று அடிக்கின்ற நிறத்தில் உடை, காலணி, தலை முடி கலர் என புதிய ஸ்டைலில் சுற்றித்திரியும் இளைஞர்களே 'புள்ளிங்கோ' என அழைக்கப்படுகின்றனர்.
புள்ளிங்க என்ற வார்த்தை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விஜய் படத்தின் மிக அதிகளவில் பேமஸாகியுள்ளது.
இந்த புள்ளிங்கோ என்று அழைக்கப்படும் இளைஞர்களைப் பார்த்தாலே, ஒரு சிலருக்கு தனி விதமான அச்சம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால், அவர்களைக் கண்டு அச்சம் கொள்வதற்கு எதுவுவே இல்லை என சில மனோதத்துவ மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், மக்களின் இந்த அச்சத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்களின் நடை, உடை, தோற்றம் என பல கூறப்படுகின்றது.
ஆனால், இதில் முக்கியமாக, புள்ளிங்கோ வண்டி ஓட்டும் விதமே மிக மோசம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுவாக இளைஞர்கள் என்றாலே வாகனங்களை உச்சபட்ச வேகம் மற்றும் ரேஷ் டிரைவ் என குறிப்பிட்ட விசயங்கள் பழக்கப்பட்டவைதான். ஆனால், புள்ளிங்கோ திடீர் திடீரென ஹாரன் அடித்து அதிர்ச்சியுற செய்வது, வேகமாக செல்வது, புது மாதிரியாக வளைத்து வளைத்து ஓட்டுவது பலவிதமான அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் என புகார்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மட்டுமே புகழ்வாய்ந்த இந்த புள்ளிங்கோ தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலும் தென்பட ஆரம்பித்துள்ளனர். அதில், ஒரு சில இளைஞர்களைதான் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
இவர்கள், சென்னை புள்ளிங்கோ-க்களைப் போலவே வாகன ஸ்டண்டுகளில் ஈடுபட்டதாக வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களை பொதுவெளியில் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இயக்குவது கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால், புள்ளிங்கோ மாதிரியான வாகன ஆர்வலர்கள் இந்த விதியை துளியளவும் மதிப்பதில்லை.
மேலும், நினைத்த இடங்களில் எல்லாம் தங்களின் சித்து வேலைகளை அவர்கள் காண்பித்து விடுகின்றனர். அவ்வாறு, சிக்னல் மற்றும் கூட்ட நெரிசல் என எதையும் பாராமல், மற்றவர்களின் கவனத்தை தங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக திடீர் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும், அதற்கான பலனையும் உடனுக்குடன் அனுபவித்து விடுகின்றனர். இதுபோன்ற, ரைடர்கள் நாட்டின் சாலையில் பலர் இருக்கின்றனர்.
அந்தவகையிலான 12 இளைஞர்கள் மீதுதான் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், விலையுயர்ந்த கேடிஎம், பல்சர் மற்றும் டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் அடங்கும்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக சுற்றி திரியும் இளைஞர்கள், திடீரென ஸ்டண்டில் ஈடுபடுவதாகவும், அவர்களால் பலர் ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும் மக்கள் கூறினர்.
ஆகையால், இதுகுறித்து கண்கானிப்பதற்காக மஃப்டியில் போலீஸார் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், பெங்களூரு நகரத்தின் பல முக்கியமான இடங்களில் மக்களுடன் மக்களாக கலந்து ஆய்வினை மேற்கொண்டனர்.
அவ்வாறு, ஆய்வு மேற்கொண்டதில் நகரத்தின் முக்கிய நகரங்களின் பல பகுதிகளில் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்த பல புள்ளிங்கோ இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
அந்தவகையில், பெங்களூருவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குழுவாக சுற்றித் திரிந்த 12 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தற்போது புள்ளிங்கோ மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!