Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம் இதுதான்... மக்களின் தலையில் இடி இறங்கியது...
தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் சத்தமே இல்லாமல் தற்போது கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 46 டோல்கேட்கள் இயங்கி கொண்டுள்ளன. இதில், 22 சுங்க சாவடிகளில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மேலும் 15 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த 15 டோல்கேட்களிலும் 3 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஞாயிற்று கிழமை (செப்டம்பர் 1) முதலே அமலுக்கும் வந்து விட்டது. தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள 15 டோல்கேட்களின் பட்டியலை பின்வரும் ஸ்லைடர்கள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1. நல்லூர் (சென்னை-தடா சாலை)
2. பாளையம் (கிருஷ்ணகிரி-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை)
3. வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்)
4. எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி)
5. கொடை ரோடு (திண்டுக்கல் பைபாஸ்-சமயநல்லூர்)
6. மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை)
7. மணவாசி (திருச்சி-கரூர்)
8. விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை)
9.பொன்னம்பலபட்டி (திருச்சி-திண்டுக்கல்)
10. நத்தக்கரை (சேலம்-உளுந்தூர்பேட்டை)
11. புதூர்பாண்டியபுரம் (மதூரை-தூத்துக்குடி)
12. திருமாந்துரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்)
13.வாழவந்தான்கோட்டை (தஞ்சாவூர்-திருச்சி)
14. வீரச்சோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை)
15. விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கப்பள்ளி)
இவை அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் பராமரிக்கப்படுபவை (National Highways Authority of India - NHAI) ஆகும். இந்த 15 டோல்கேட்களையும் நீங்கள் கடக்க வேண்டுமென்றால், இனி 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
52 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க வேண்டுமென்றால், கார், ஜீப் மற்றும் இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கு முன்பு ஒரு டிரிப்பிற்கு 55 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இலகு ரக கமர்ஷியல் வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவற்றுக்கு முன்பு ஒரு டிரிப்பிற்கு 90 ரூபாய்தான் கட்டணமாக இருந்தது.
இது தற்போது 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் பஸ் மற்றும் லாரி ஆகிய வாகனங்களுக்கான கட்டணம் 190 ரூபாயில் இருந்து 195 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்று-ஆக்ஸில் கமர்ஷியல் வாகனங்களுக்கு முன்பு 205 ரூபாய் மட்டுமே கட்டணமாக இருந்தது. இது தற்போது 215 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டோல்கேட் கட்டணங்கள் உயர்ந்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழி வகுத்து விடும் என்பதால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு முன் அறிவிப்பு எதுவும் செய்யப்படாமல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கட்டண உயர்விற்கு மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இது நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!