Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓட்ட, ஒடஞ்ச அரசு பேருந்துகளுக்கு குட்-பை சொல்லும் நேரம் வந்தாச்சு!! எல்லாம் மத்திய அரசின் செயல்...
வாகனங்களின் தரமும், அவை வெளிப்படுத்தும் காற்று மாசுவின் அளவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது ஒழுங்குப்படுத்துகின்றன. இதனாலேயே தரம் மற்றும் என்ஜின் வெளிப்படுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு ஆனது பழைய வாகனங்கள் மற்றும் தற்போதைய மாடர்ன் வாகனங்களுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது.
இருப்பினும் பழைய வாகனங்களை சிலர் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றனர். அதனை முற்றிலும் தடுக்கும் விதமாக கடந்த 2021ஆம் ஆண்டில் வாகன அழிப்பு கொள்கையில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்தது. 2021-22 யூனியன் பட்ஜெட்டின் போது கொண்டுவரப்பட்ட இந்த கட்டுப்பாடுகளின்படி, மக்கள் சொந்தமாக பயன்படுத்தும் வாகனங்கள் அவற்றின் வயது 20-ஐ எட்டிய பின் தர சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெறும் வாகனங்கள் ஸ்க்ராப், அதாவது அழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஸ்க்ராப் செய்யப்பட வேண்டிய வாகனங்களை முறையாக பதிவு செய்து அழித்தால், சில சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற முடியும். மக்களின் சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு தான் வயது வரம்பு 20 ஆகும். அதுவே கமர்ஷியல் வாகனங்களுக்கு 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கமர்ஷியல் வாகனங்களில் மத்திய & மாநில அரசாங்கங்களின் அரசாங்க பயன்பாட்டு வாகனங்களும், அரசு பேருந்துகளும் கூட அடங்குகின்றன.
இந்த நிலையில், புதிய ஸ்க்ராப் கொள்கையின்படி, வருகிற 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15 வருடங்களுக்கு பழமையான அனைத்து மத்திய & மாநில அரசு வாகனங்களும் அவற்றின் ஆர்டிஓ பதிவு ரத்து செய்யப்பட்டு ஸ்க்ராப் செய்யப்பட உள்ளதாக சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளில் நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக பிரத்யேகமாக பாதுகாப்பு கவசங்களுடன் உருவாக்கப்பட்ட வாகனங்கள் உட்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், மத்திய அரசின் புதிய ஸ்க்ராப் கொள்கையின்படி பழைய வாகனங்களை அழிக்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பிடத்தக்க சலுகையினை தங்களது புதிய வாகன பதிவின் போது பெறலாம். அந்த சலுகை ஆனது, புதிய வாகனத்திற்கான சாலை வரியில் 25% வரையில் தள்ளுபடியை பெறலாம் என்பதாகும். மக்கள் தங்களது பழைய வாகனங்களை ஒரு மூலையில் ஓரங்கட்டிவிடாமல் முறையாக அவற்றை அழிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய புதிய ஸ்க்ராப் கொள்கையினை 2021-22 யூனியன் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
அந்த கொள்கை கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பின்னர் வருகிற 2023 ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளன. இதற்காக நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் 150கிமீ தொலைவிற்கு உள்ளாக குறைந்தப்பட்சம் ஒரு ஆட்டோமொபைல் ஸ்க்ராப்பிங் மையத்தை ஆவது உருவாக்கும் திட்டத்தில் உள்ளதாக கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.
இதன் மூலமாக நாட்டில் தேவையற்ற வாகன குப்பை கிடங்குகள் உருவாகுவது தடுக்கப்படும் என்பது மட்டுமின்றி, மொத்த தெற்காசியாவில் இந்தியா ஓர் வாகன ஸ்க்ராப்பிங் மையமாக உருவெடுக்கும் என்றும் மத்திய அரசு நம்பிக்கையாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்த தேசிய வாகன அழிப்பு கொள்கையினை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தேசிய வாகன கொள்கையின்படி, 15 வருடங்களுக்கும் மேல் பழமையான அரசு பேருந்துகளும் அழிக்கப்பட உள்ளது உண்மையில் சிறந்த விஷயமாகும்.
ஏனெனில் பழுதடைந்த & பழைய அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்வது நாடு முழுவதும் பரவலாக கிராம புறங்களில் பிரச்சனையாக உள்ளது. இத்தகைய பிரச்சனைகள் சில சமயங்களில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அத்தகைய சம்பவங்களை இந்த புதிய தேசிய வாகன அழிப்பு கொள்கை தவிர்க்கும் என்பது உறுதி. ஆனால் அதேநேரம் இந்த புதிய கொள்கையினால் இனி ஒவ்வொரு வருடமும் அரசு வாகனங்களுக்கான நிதி அதிகரிக்கும் என்பதும் உண்மையே.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!