Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை காக்கும் அதிநவீன கருவி.. 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு
தீவிரவாதிகளிடம் இருந்து இந்திய ராணுவ வீரர்களை பாதுகாக்கும் அதிநவீன கருவியை, 16 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் கண்டுபிடித்துள்ளார். தேசப்பற்று மிகுந்த அந்த சிறுவனின் கண்டுபிடிப்பிற்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தீவிரவாதிகளிடம் இருந்து நமது நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய மிக உன்னதமான பணியை இந்திய ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர். இதுதவிர வடக்கு எல்லையில் பாகிஸ்தான், வட கிழக்கு எல்லையில் சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
அவ்வப்போது தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்து நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிடுகின்றனர். இருந்தபோதும் சில சமயங்களில் ராணுவ வீரர்கள் சிலர் இதில் வீர மரணம் அடைய நேரிடுகிறது.
துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் மட்டுமே தீவிரவாதிகளின் ஆயுதம் கிடையாது. பூமிக்கு அடியில் கண்ணிவெடிகளை பதித்து, ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வழக்கத்தை தீவிரவாதிகள் இன்றளவும் கையாண்டு வருகின்றனர்.
கண்ணிவெடிகள் மிகவும் அபாயகரமானது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழக்க நேரிடும். ஆனால் தற்போது இந்த பிரச்னைக்கு அதிநவீன முறையில் தீர்வு கண்டிருக்கிறார் ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவரான ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலாவிற்கு, 16 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் இவருக்கு புத்தி கூர்மையுடன் சேர்த்து தேசப்பற்றும் மிகுந்து காணப்படுகிறது. இதன் விளைவாக அதிநவீன ட்ரோன் (Drone) ஒன்றை ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா வடிவமைத்துள்ளார்.
16 வயது மட்டுமே நிரம்பிய ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா கண்டறிந்துள்ள ட்ரோனின் சிறப்பம்சங்கள் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இவர் தனது ட்ரோனுக்கு ஈகிள் ஏ7 (EAGLE A7) என பெயரிட்டுள்ளார். இது மிகவும் அபாயகரமான கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் வல்லமை வாய்ந்தது.
ஈகிள் ஏ7 ட்ரோனில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்பம் தற்போது உலகில் வேறு எங்கும் கிடையாது என ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதன்மூலம் கண்ணிவெடிகளில் இருந்து பலரின் உயிர் காப்பாற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலா கூறுகையில், ''ஈகிள் ஏ7 ட்ரோனில், மல்டி-ஸ்பெக்ட்ரல் லேண்ட்மைன் டிடெக்ஸன் டெக்னாலஜி (Multi-spectral Landmine Detection Technology) உள்ளது. இதன்மூலம் கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க முடியும். தற்போது இந்த தொழில்நுட்பம் வேறு எங்கும் இல்லை.
இந்திய ராணுவம், சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை, Central Reserve Police Force) உள்ளிட்ட நமது பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும். எனவே எனது ஈகிள் ஏ7 ட்ரோன், நமது பாதுகாப்பு படைகளில் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் எனது தொழில்நுட்பம் மூலம் ராணுவம் உள்ளிட்ட நமது பாதுகாப்பு படைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை, விருப்பம், எண்ணம் எல்லாம்'' என்றார்.
தற்போது ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரது கண்டுபிடிப்பு இந்தியாவை பெருமைப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவிற்காக அவர் இன்னும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க வாழ்த்துவோம்.
ஹர்ஷ்வர்தன்சிங் ஜாலாவின் கண்டுபிடிப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இதுதொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சூழலில் நமது நாட்டில் சமீப காலமாக பறக்கும் ட்ரோன் அல்லது ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் பிரபலம் அடைந்து வருகிறது. எனவே கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் இதன் பயன்பாடு இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், இதற்கென தனியாக தேசிய ட்ரோன்கள் கொள்கையை (National Drones Policy) வகுத்துள்ளது. இது ட்ரோன் ஒழுங்குவிதிகள் 1.0 (Drone Regulations 1.0) என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் ட்ரோன்களை எங்கு, எப்போது, எப்படி? இயக்க வேண்டும் என்பதை தேசிய ட்ரோன்கள் கொள்கை தெளிவுபடுத்துகிறது. இதன்படி உரிய அனுமதி பெற்ற பின், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தனி நபர்கள் ட்ரோன்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!