Just In
- 7 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Movies அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மிகவும் பழமையான மேம்பாலத்திற்கு நேர்ந்த சோகம்! தேசிய ஊரடங்கில் வரலாற்று சின்னத்தை அழித்த மஹாராஷ்டிரா
இந்தியாவின் மிகவும் பழமையான மேம்பாலங்களில் ஒன்றான அமுர்தாஞ்ஜன் மேம்பாலத்தை மஹாராஷ்டிரா அரசு வெடிகுண்டு வைத்து இடித்து தள்ளியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியா ஓர் வரலாற்று சிறப்புமிக்க நாடாகும். இதற்கு பல ஆண்டுகளாக நீ��ித்திருக்கும் கோட்டைகளும், கோவில்களுமே முக்கிய சான்று. இவை இந்தியாவின் வரலாற்று சின்னங்களாக இருந்து வருகின்றன. ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான வரலாறும், சிறப்புமிகுந்த கதைகளும் அடங்கியுள்ளன. அந்தவகையிலான ஓர் பழமைவாய்ந்த மேம்பாலத்தை மஹாராஷ்டிரா மாநில அரசு வெடி வைத்து தகர்த்தெரிந்துள்ளது.
இது பிரிட்டிஷார்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் ஆகும். அமுதாஞ்ஜன் என்ற பெயரைக் கொண்ட அந்த மேம்பாலம் மும்பமை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது.
1830ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்ட தொடங்கப்பட்ட இந்த மேம்பாலத்தை எந்தவொரு தொழில்நுட்ப அம்சமும் இல்லாத காலத்திலேயே வெறும் மனித சக்திகளை மட்டுமே வைத்து ஆங்கிலேய அரசு கட்டிமுடித்தது. அதுவும் 11 மாதங்களுக்கு உள்ளாகவே.
இதனை டெக்கன் (ஹில்லி) மற்றும் கொன்கன் (கோஸ்டல்) ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வெள்ளைக்காரர்கள் கட்டி எழுப்பினார்கள். அப்போது, இந்த மேம்பாலம் நீண்ட காலம் நீடித்து உழைக்கும் என்ற உத்தரவாத சான்ற அவர்கள் கொடுத்திருந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த மேம்பாலத்தின்கீழ் ஒரு கல்வெட்டையும் அவர்கள் பொதித்திருந்தனர்.
அதில், மேம்பாலம் கட்ட தொடங்கப்பட்ட நாள் மற்றும் முடிக்கப்பட்ட நாள் ஆகியவை இடம் பெறறிருக்கின்றன. இதுமட்டுமின்றி, அப்போது அந்த பகுதியை கண்கானித்து வந்த வெள்ளையரின் பெயரும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை மற்றும் புனேவைச் சுற்றியிருக்கும் பகுதியை சர் ஜான் மல்கோம் ஜி.சி.இ அன்னோ டோம்னி என்பவர் கண்கானித்து வந்துள்ளார். இவரே, பெரு வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ப இந்த மேம்பாலத்தை கட்ட தூண்டுகோளாக இருந்துள்ளார்.
இந்த மேம்பலாத்தைதான் மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி) வெடி வைத்து இடித்து தகர்த்துள்ளது. இந்த மேம்பாலம் பல காலங்களாக பயன்பாட்டில் இல்லாததாலும், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அந்த கழகம் இத்தகைய செயலைச் செய்துள்ளது.
மேலும், இந்த மேம்பாலத்தின் தூண்கள் சாலையில் சென்று வரும் வாகனங்களை தடையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதனால், அவ்வப்போது அந்த எக்ஸ்பிரஸ் வே-வில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், பயன்படாத மற்றும் இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை நீக்கிவிட்டு ஆறு வழிச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பணியின் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படக்கூடாது என்பதற்காக வாகன வரத்து குறைவாக இருக்கும் நேரம்பார்த்து மேம்பாலம் தகர்க்கும் வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, மிகக் குறுகிய நேரங்கள் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் மறு சீரமைக்கப்பட்டது.
அதேசமயம், தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இதனால் பெருமளவிலான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட எம்எஸ்ஆர்டிசி எந்தவொரு தடைமின்றி மிகவிரைவில் மீண்டும் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக விரைந்து புணரமைக்கும் பணியைச் செய்து வருகின்றது.
தற்போது கொரோனா வைரசின் காரணமாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் வதந்தியாக பரவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் அரசு சார்பில் இருந்து இதுரை வெளியிடப்படவில்லை.
இந்த மாதிரியான சூழ்நிலைக்குள்ளாகவே அனைத்து பணிகளையும் முடித்துவிட ராய்காட் மாவட்ட ஆட்சியர் எம்எஸ்ஆர்டிசி-க்கு அனுமதி வழங்கியுள்ளார். எனவே, சாலை விரிவாக்கம் பணி வாகன போக்குவரத்திற்கு துளியளவும் பாதிப்பு விளைவிக்காது என தெரிகின்றது. அதேசமயம், இந்த பணியின்போது கூடுதல் கவனமாக இருக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்