Just In
- 39 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 45 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக காவல் துறை தரப்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.
இதுதவிர சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகளும், காவல் துறையும் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை அபராதம் உள்ளிட்ட வழிகளின் மூலம் போலீசார் தண்டித்து வருகின்றனர்.
இந்த சூழலில் விஜயவாடா நகரில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவான போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாதது தொடர்பாகதான் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை விஜயவாடா போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி கடந்த ஜனவரியில் இருந்து ஹெல்மெட் அணியாதது தொடர்பாக மொத்தம் 2.80 லட்சம் இ-செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் 40 சதவீதம் பேர் மட்டுமே அபராத தொகைகளை முறையாக செலுத்தியுள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக அம்மாநில அரசு இதுவரை எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை.
எனவே தற்போதைய நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இருந்தபோதும் தற்போது வரை, ஹெல்மெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 1.16 லட்சம் பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 11 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.
பதிவான வழக்குகளின் எண்ணிக்கையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட டிரான்ஸ்போர்ட் சேவை வாகன டிரைவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக 18,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 62 சதவீத ஆட்டோ டிரைவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தியுள்ளனர்.
அதே சமயம் மூன்றாவது இடத்தை நம்பர் பிளேட் விதிமுறை மீறல்கள் தொடர்பான வழக்குகள் பிடித்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் ட்ரிபிள் ரைடிங் உள்ளது. ஆனால் ட்ரிபிள் ரைடிங் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தவில்லை. வெறும் 41 சதவீதம் பேர் மட்டுமே அபராதத்தை செலுத்தியுள்ளனர்.
அதே சமயம் நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்தி விதிமீறலில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் அபராத தொகையை செலுத்தியுள்ளனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அபராத தொகைகளை செலுத்திய பிறகே விடுவிக்கப்படுகின்றன. எனவே இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தி விடுகின்றனர்'' என்றனர்.