Just In
- 46 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 1 hr ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 3 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 4 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாலை விபத்துக்களில் அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள்
இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், சாலை விபத்துக்களின் காரணமாக நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் அதை உறுதி செய்கின்றன.
கடந்த 2014ம் ஆண்டு இந்திய சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக 12,330 பாதசாரிகள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையானது 2017ம் ஆண்டில் 66 சதவீதம் அதிகரித்து 20,457ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 56 பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துக்களின் காரணமாக நாட்டிலேயே அதிக அளவிலான பாதசாரிகள் உயிரிழந்தது தமிழ்நாட்டில்தான். 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 3,507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான பாதசாரிகளை பறிகொடுத்திருப்பது மகாராஷ்டிர மாநிலம். அங்கு 2017ம் ஆண்டில் 1,831 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 2017ம் ஆண்டில், 1,379 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே சைக்கிள் மற்றும் டூவீலர்களில் பயணிப்பவர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய சாலைகளில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும், சைக்கிள்களில் பயணித்த 3,559 பேரும், டூவீலர்களில் பயணித்த 48,746 பேரும் விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதாவது 2017ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் சராசரியாக நாள்தோறும் சைக்கிள்களில் பயணித்த 10 பேரும், இரு சக்கர வாகனங்களில் பயணித்த 133 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
நாட்டிலேயே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகப்படியான இரு சக்கர வாகன ஓட்டிகளை பறிகொடுக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இங்கு 2017ம் ஆண்டில் மட்டும் 6,329 இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் 5,699 இரு சக்கர வாகன ஓட்டிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,659 இரு சக்கர வாகன ஓட்டிகளும், 2017ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துக்களில் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்படக்கூடியவர்களாக பாதசாரிகள் உள்ளனர். நாட்டின் முக்கியமான நகரங்களில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என தனியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நடைபாதைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைக்கப்படுகின்றன. எனவே சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பாதசாரிகள் ஆளாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!