Just In
- 1 hr ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 2 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 4 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- News Exclusive: நான் சாதி வெறியன் இல்லை.. அது பொய் வீடியோ! கொமதேக நாமக்கல் வேட்பாளர் சூரியமூர்த்தி பேட்டி
- Movies பெண்களை வார்த்தையால் கற்பழிக்கிறார்கள்.. அறந்தாங்கி நிஷா மன வேதனை!
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கா!! சென்னையில் வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸார்!
சென்னையில் விதிகளை மீறி நம்பர் ப்ளேட் வைத்துள்ளவர் சுமார் 2343 பேர் மீது நேற்று (அக்.26) ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதியும், முறைக்கேடுகளை தவிர்க்கவும் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் பல்வேறு விதமான புதிய விதிகளை நாட்டில் அமல்படுத்தியும், செயல்படுத்தியும் வருகின்றன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விதிமுறைகளில் அரசு சற்று கூடுதல் கவனத்துடனே செயல்படுகிறது.
ஏனெனில் விபத்தில் இருந்து பயணிகளை முழுமையாக பாதுகாக்கக்கூடிய 2-வீலர்ஸ் எதுவும் தற்போதைக்கு விற்பனையில் இல்லை. அதுமட்டுமில்லாமல் நான்கு சக்கர வாகனங்களை காட்டிலும் இருசக்கர வாகனங்கள் திருடு போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு திருடு போகும் இருசக்கர வாகனங்கள் தான் பெரும்பாலும் திருட்டு, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் பயன்படுத்தப்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு வாகனங்களையும் அதன் உரிமையாளர்களுடன் அடையாளப்படுத்துவது முக்கியமாகும். இந்த விஷயத்தில் வாகனத்தின் முன் & பின்பக்கத்தில் பொருத்தப்படும் நம்பர் ப்ளேட்கள் முக்கியமான பங்காற்றுகின்றன. இதன் மூலம், குற்ற சம்பவங்களில் வாகனத்தின் உரிமையாளர் அல்லாமல் வேறொருவர் ஈடுப்பட்டு இருந்தாலும் அவரை போலீஸாரால் நெருங்க முடிகிறது.
ஆனால் இந்த சாலைவிதியினை முறையாக அனைத்து வாகன ஓட்டிகளும் பின்பற்றுகிறார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். ஏனெனில் நம் மாநில தலைநகர் சென்னையில் நேற்று (அக்.26) ஒரே நாளில் கிட்டத்தட்ட 2,343 பேர் மீது வாகன நம்பர் ப்ளேட் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2,343 பேரில், மோட்டார் வாகன சட்டத்தின்படி நம்பர் ப்ளேட் வைக்காதவர்கள், அதில் பிற வசனங்கள், படங்கள், அனுமதிக்கப்படாத சின்னங்கள் வைத்திருந்தவர்கள் அடங்குவர். வாகனங்களையும், அவற்றின் வாகன ஓட்டிகளையும் தீவிரமாக கண்காணிக்க சென்னை போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று துவங்கி அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தணிக்கை நாளை அக்.28ஆம் தேதியில் தான் முடிவடையும். எனவே சென்னையில் வசிப்போர் சாலையில் வாகனத்தில் கிளம்புவதற்கு முன், எடுத்து செல்ல வேண்டியவையும், அணிந்து செல்ல வேண்டியவையும் சரியாக உள்ளனவா என்பதை ஒருமுறை சரி பார்த்து கொள்ளுங்கள்.
இல்லையென்றால் வீணாக அபராதத்திற்கு உள்ளாக நேரிடும். நம்பர்-ப்ளேட் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த 2,343 பேருக்கு எந்த அளவில் அபராதங்கள் விதிக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. முன்னதாக சமீபத்தில், இருசக்கர வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் புதிய விதியினை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டு இருந்தது.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாக இந்த புதிய விதி விளங்குகிறது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான்கு அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்தும்போது அதிகப்பட்சமாகவே மணிக்கு 40கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 4 (அ) அதற்கு கீழ் வயதுடைய சிறுவர் & சிறுமியர் கூட ஹெட்ல்மெட் கட்டாயம் அணிந்திருத்தால் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டி மற்றும் பயணி என இருவரும் ஹெல்மெட் அணித்திருத்தல் வேண்டும் என சட்டம் கூறுகிறது. மேலும் சிறுவர்/ சிறுமியர் இருசக்கர வாகனத்துடன் இணைத்து கட்டப்பட்டிருப்ப்தையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டுமாம்.
சிறுவர்கள் அல்லது குழந்தைகளை உடன் அழைத்து செல்வதற்கு ஆக்ஸஸரீகள் தற்சமயம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. முன்னதாக இதேபோன்று கேரள அரசாங்கம் 2-வீலர்ஸில் பயணிக்கும்போது குடை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய விதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. சரியாக மழைக்காலம் வெளுத்துவாங்க துவங்கி இருக்கும் தற்போதைய சூழலில் இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதால், இது கேரள வாகன ஓட்டிகள் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணத்தின்போது குடை பிடித்தப்படி செல்வது காற்றின் வேகம் மற்றும் மழையின் அளவு உள்ளிட்டவற்றை பொறுத்து சில சமயங்களில் விபத்திலும் சென்று முடியலாம். இதனை கருத்தில் கொண்டே கேரள அரசாங்கம் இவ்வாறான விதியினை கொண்டுவந்துள்ளது. இதை எத்தனை பேர் முறையாக பின்பற்றவுள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நம் தமிழகத்திலும் இவ்வாறான சட்டங்கள் தேவையா என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!