Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பணத்தை 'ஸ்வாகா' செய்யும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணத்தை 'ஸ்வாகா' செய்து வருகின்றனர்.
இன்றைய சூழலில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. வாகனம் இல்லாமல் ஒருவரால் தனது அன்றாட பணிகளை செய்து முடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு வாகனங்கள் நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டன. ஆனால் வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வாகன ஓட்டிகளை தலை சுற்ற வைக்கிறது.
இதுபோதாதென்று பெட்ரோல் பங்க்குகளில் நடைபெறும் மோசடிகளின் மூலமாக வேறு வாகன ஓட்டிகளின் பணம் 'ஸ்வாகா' செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
மீட்டர் முறைகேடு
இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நடந்து வரும் ஒரு பொதுவான மோசடி என இதனை கூறலாம். ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் மீட்டரில் தில்லுமுல்லு செய்கின்றனர். மீட்டரில் முறைகேடு செய்ததாக கடந்த காலங்களில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பங்க்குகளில், வாகன ஓட்டிகளுக்கு உரிய அளவில் பெட்ரோல், டீசல் வினியோக்கப்படுவதில்லை என்பது போன்ற புகார்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. முறைகேடுகளின் மூலம் குறைவான அளவில் எரிபொருள் வினியோகிக்கும் பங்க்குகள் மீது அரசு அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களின் 'டபுள் செக்கிங்'
உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு ரூபாய்க்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்? என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் 1,000 ரூபாய்க்கு நிரப்பும்படி கூறுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உடனே பெட்ரோல் பங்க் ஊழியர் எரிபொருள் நிரப்ப தொடங்குவார். ஆனால் மீட்டர் 200 ரூபாயை காட்டியதும் அவர் பெட்ரோல் நிரப்புவதை நிறுத்தி விடுவார்.
இதன்பின் எனக்கு சரியாக கேட்கவில்லை. எவ்வளவு ரூபாய்க்கு நிரப்பும்படி கூறினீர்கள்? என்று மீண்டும் ஒரு முறை அவர் உங்களிடம் கேட்பார். இதற்கு நீங்கள் மீண்டும் 1,000 ரூபாய்க்கு என பதில் அளிப்பீர்கள். அந்த சமயத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீட்டரை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்த பின் எஞ்சிய 800 ரூபாய்க்கு உங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.
ஆனால் அவர் மீட்டரை பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யாமல், மீண்டும் 200 ரூபாயில் இருந்தே எரிபொருள் நிரப்ப தொடங்குவார். மீட்டர் 800 ரூபாய்க்கு வந்ததும் நிறுத்தி விடுவார். எனவே எஞ்சிய 800 ரூபாய்க்கும் எரிபொருள் நிரப்பி விட்டதாக நீங்களும் நினைத்து கொள்வீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே வெறும் 800 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் நிரப்பியிருப்பார்கள்.
ஆனால் உங்களிடம் 1,000 ரூபாயை வசூலித்து கொள்வார்கள். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உங்கள் கவனம் திசை திரும்பும் நேரத்தை பயன்படுத்தி கொண்டு, மீட்டரை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யாமல் விட்டு விடுவார்கள். எனவே இதுபோன்ற சூழல்களில், நீங்கள் கவனமாக இருந்தால் மட்டுமே ஏமாறாமல் தடுக்க முடியும்.
இதுதவிர எரிபொருளில் கலப்படம் செய்வது போன்ற வழிமுறைகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் எளிதாக ஏமாற்றப்படுகின்றனர். இதுபோன்று மோசடி நடைபெறும் பெட்ரோல் பங்க்குகளை கண்டறிந்து, அங்கு எரிபொருள் நிரப்புவதை தவிர்த்து விடுங்கள். இது உங்களுடைய பர்சுக்கு மட்டுமல்லாது, உங்கள் வாகனத்திற்கும் நல்லது.
பெட்ரோல் பங்க்குகளில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள். நமது மற்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்க உங்கள் அனுபவம் உதவக்கூடும்.
Note: Images used are for representational purpose only.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?