Just In
- 15 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பணத்தை 'ஸ்வாகா' செய்யும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்...
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணத்தை 'ஸ்வாகா' செய்து வருகின்றனர்.
இன்றைய சூழலில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. வாகனம் இல்லாமல் ஒருவரால் தனது அன்றாட பணிகளை செய்து முடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு வாகனங்கள் நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டன. ஆனால் வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வாகன ஓட்டிகளை தலை சுற்ற வைக்கிறது.
இதுபோதாதென்று பெட்ரோல் பங்க்குகளில் நடைபெறும் மோசடிகளின் மூலமாக வேறு வாகன ஓட்டிகளின் பணம் 'ஸ்வாகா' செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
மீட்டர் முறைகேடு
இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நடந்து வரும் ஒரு பொதுவான மோசடி என இதனை கூறலாம். ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் மீட்டரில் தில்லுமுல்லு செய்கின்றனர். மீட்டரில் முறைகேடு செய்ததாக கடந்த காலங்களில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பங்க்குகளில், வாகன ஓட்டிகளுக்கு உரிய அளவில் பெட்ரோல், டீசல் வினியோக்கப்படுவதில்லை என்பது போன்ற புகார்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. முறைகேடுகளின் மூலம் குறைவான அளவில் எரிபொருள் வினியோகிக்கும் பங்க்குகள் மீது அரசு அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களின் 'டபுள் செக்கிங்'
உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு ரூபாய்க்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்? என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் 1,000 ரூபாய்க்கு நிரப்பும்படி கூறுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உடனே பெட்ரோல் பங்க் ஊழியர் எரிபொருள் நிரப்ப தொடங்குவார். ஆனால் மீட்டர் 200 ரூபாயை காட்டியதும் அவர் பெட்ரோல் நிரப்புவதை நிறுத்தி விடுவார்.
இதன்பின் எனக்கு சரியாக கேட்கவில்லை. எவ்வளவு ரூபாய்க்கு நிரப்பும்படி கூறினீர்கள்? என்று மீண்டும் ஒரு முறை அவர் உங்களிடம் கேட்பார். இதற்கு நீங்கள் மீண்டும் 1,000 ரூபாய்க்கு என பதில் அளிப்பீர்கள். அந்த சமயத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீட்டரை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்த பின் எஞ்சிய 800 ரூபாய்க்கு உங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.
ஆனால் அவர் மீட்டரை பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யாமல், மீண்டும் 200 ரூபாயில் இருந்தே எரிபொருள் நிரப்ப தொடங்குவார். மீட்டர் 800 ரூபாய்க்கு வந்ததும் நிறுத்தி விடுவார். எனவே எஞ்சிய 800 ரூபாய்க்கும் எரிபொருள் நிரப்பி விட்டதாக நீங்களும் நினைத்து கொள்வீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே வெறும் 800 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் நிரப்பியிருப்பார்கள்.
ஆனால் உங்களிடம் 1,000 ரூபாயை வசூலித்து கொள்வார்கள். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உங்கள் கவனம் திசை திரும்பும் நேரத்தை பயன்படுத்தி கொண்டு, மீட்டரை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யாமல் விட்டு விடுவார்கள். எனவே இதுபோன்ற சூழல்களில், நீங்கள் கவனமாக இருந்தால் மட்டுமே ஏமாறாமல் தடுக்க முடியும்.
இதுதவிர எரிபொருளில் கலப்படம் செய்வது போன்ற வழிமுறைகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் எளிதாக ஏமாற்றப்படுகின்றனர். இதுபோன்று மோசடி நடைபெறும் பெட்ரோல் பங்க்குகளை கண்டறிந்து, அங்கு எரிபொருள் நிரப்புவதை தவிர்த்து விடுங்கள். இது உங்களுடைய பர்சுக்கு மட்டுமல்லாது, உங்கள் வாகனத்திற்கும் நல்லது.
பெட்ரோல் பங்க்குகளில் நடைபெறும் இதுபோன்ற மோசடிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள். நமது மற்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்க உங்கள் அனுபவம் உதவக்கூடும்.
Note: Images used are for representational purpose only.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!