Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இப்படி ஒரு விஷயத்தை கேள்விபட்டதே இல்ல! கார் மீது பறவை எச்சமிட்டால் நிறைய பேர் சந்தோஷப்படுவாங்க! ஏன் தெரியுமா?
கார் மீது பறவைகள் எச்சம் இட்டால், ஒரு சிலர் ஏன் சந்தோஷப்படுகின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் மட்டுமே மூடநம்பிக்கைகள் அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் உலகம் முழுவதும் பல்வேறு வகையான மூடநம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மத்தியில் ஏராளமான மூடநம்பிக்கைகள் பரவலாக காணப்படுகின்றன.
கார்களில் எலுமிச்சை பழத்தை கட்டி தொங்க விட்டால் கெட்டது நடக்காது என்ற மூடநம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது. இதேபோல் உலகம் முழுவதும் மிகவும் விசித்திரமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இதில், ஒரு சில மூடநம்பிக்கைகள் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம்.
மயானத்தை கடக்கும்போது இப்படியா செய்வது?
மயானத்தை கடக்கும்போது மூச்சை பிடித்து வைத்து கொள்வதை, கார் டிரைவர்கள் மற்றும் பயணிகள் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதாவது மயானத்தை கடக்கும் வரை அவர் மூச்சு விடுவதில்லை. மூச்சு விட்டால், சமீபத்தில் இறந்தவர்களுடைய ஆவி உடலுக்குள் நுழைந்து விடும் என்ற மூடநம்பிக்கைதான் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவும் வெறும் மூடநம்பிக்கை மட்டுமே. எனவே மயானத்தை கடக்கும்போது, எப்போதும்போல் மூச்சு விடலாம். ஆவி உடலுக்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில், மூச்சு விடாமல் வேறு ஏதேனும் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளை தேவையில்லாமல் உருவாக்கி கொள்ளாதீர்கள். மற்றவர்கள் யாராவது இந்த மூடநம்பிக்கையை பின்பற்றினால், அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
புதிய காரில் வேண்டுமென்றே கீறல் போடலாமா?
புதிய கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஒரு சிலர் நம்புகின்றனர். எனவே புதிய காரை வாங்கியவுடன் நாமாகவே கீறல் போட்டு கொள்ள வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். உண்மையில் நிறைய பேர் இப்படி செய்கின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் கார் விபத்தில் சிக்காது என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.
ஆனால் இதுவும் மூடநம்பிக்கைதான். இப்படி நினைப்பவர்கள் பேசாமல் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கி கொள்ளலாம் அல்லவா? வேடிக்கையாக மட்டுமே இதனை கூறினோம். நீங்கள் தாராளமாக புதிய காரை வாங்கலாம். கஷ்டப்பட்டு சேர்த்து வாங்கிய பணத்தில் கீறல் எல்லாம் போடாதீர்கள். இதற்கும், விபத்துக்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை.
முத்தம் கொடுத்தால் அதிர்ஷ்டம் அடிக்குமா?
ஒரு சில கார் உரிமையாளர்கள், காரை ஓட்ட தொடங்குவதற்கு முன்பாக தங்கள் கை விரல்களை தாங்களே முத்தமிட்டு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ காரின் சீலிங்கை, அதாவது உட்புற மேற்கூரையை தொட்டு கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை எல்லாம் செய்தால், அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது பலரின் எண்ணம்.
அதேபோல் தீய சக்திகள் தங்களை நெருங்காது எனவும் நினைக்கின்றனர். ஆனால் இவையும் மூடநம்பிக்கை மட்டுமே. இப்படி எல்லாம் செய்தால் சாலை விபத்துக்கள் நடக்காது என்பதும் பலரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இதற்கும், சாலை விபத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எனவே இவையும் 100 சதவீதம் மூடநம்பிக்கை மட்டுமே.
பறவை எச்சம் இட்டால் பணம் கொட்டுமா?
பறவை காரின் மீது எச்சம் இட்டால், அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூடநம்பிக்கையும் கூட பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நடந்தால் செல்வம் கொட்டும் என பலரும் நம்புகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கை மட்டுமே. எனவே ஒருவேளை பறவை உங்கள் கார் மீது எச்சம் இட்டால், அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரி வாங்க சென்று விடாதீர்கள்.
இதுபோன்ற மூடநம்பிக்கைகள் எப்படி தோன்றின? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் நிறைய கார் உரிமையாளர்கள் இந்த மூடநம்பிக்கைகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். நீங்களும் கூட கார் ஓட்டும்போது ஏதேனும் மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரிவியுங்கள்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!