Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்!
ஆந்திர மாநிலத்தில் 5 வயது சிறுவன் தனது டாய் பேட்டரி காரை இயக்கிக்கொண்டு, அப்பகுதியின் மிகவும் பிஸியான சாலைக்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வாகன சட்டத்தின்படி, வாகனங்களை இயக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதன்பின்னர் தான், சாலையில் வாகனத்தை இயக்கும் உரிமம் பெற அவர் தகுதியானவராக கருதப்படுவார். மேலும், உரிமத்திற்காக விண்ணப்பிப்பவர்கள், போக்குவரத்து விதிகளுக்கு ஏற்ப சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, சாலையில் வாகனத்தை இயக்குவதர்க்கான உரிமம் வழங்கப்படும்.
ஆனால், சிலரோ ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதில், வயது முதிர்ந்த சிலரும் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை திருட்டுத்தனமாக இயக்குகின்றனர். போக்குவரத்து சட்டத்தின்படி, இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபகாலமாக சிறுவர்களால் ஏற்படும் விபத்து அதிகளவில் அரங்கேறி வருவதாக பல்வேறுபட்ட தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழும்பிய வண்ணம் உள்ளது. இதுபோன்று சம்பவங்களையும் நாம் சில முறை செய்தி தாள்களிலும், டிவியிலும் பார்த்திருப்போம். இத்தகைய, குற்றத்தை தவிர்க்கும் விதமாக, சிறுவர்கள் சாலையில் வாகனத்தை இயக்கினால், அவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய உத்தரவை நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது. இந்த புதிய விதியால் பத்துக்கும் மேற்பட்டோர் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதில் எந்த குறைபாடுமில்லாமல் நடைபெற்று வருகிறது. அவ்வாறு சமீபத்தில் சென்னையில் சொகுசு கார் ஒன்றை இயக்கிய சிறுவன் தாருமாறாக காரை ஓட்டிச் சென்று சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் முட்டி மோதி தள்ளியுள்ளான். அப்போது, அந்த சிறுவனை விரட்டிச்சென்று பிடித்த அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த காரை சின்னாபின்னமாக அடித்து துவம்சமும் செய்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜயாவாடாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது 5 வயது மகனுக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய டாய் காரை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் சிறுவன் மிகவும் அடம்பிடித்ததன் காரணமாக சிறுவனிடம் பேட்டரி காரை கொடுத்த அவனது வீட்டார், வீட்டிற்கு அருகிலேயே வைத்து விளையாடும் கூறியுள்ளனர். பின்னர், அவரது வேலையை கவனிக்க அவர் சென்றுவிட்டார்.
அப்போது, வீட்டுக்கு அருகிலேயே விளையாடிய சிறுவன், சிறிது சிறிதாக அங்கிருந்து நகர்ந்து பென்ஸ் சர்க்கில் எனப்படும் பிஸியான சாலைக்குள் நுழைந்துள்ளான். சிறுவன் தனியொருவனாக காரை ஓட்டிச் செல்லும் காட்சியைக் கண்ட வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவனை மடக்கிய பொதுமக்கள் மற்றும் போலீஸார் சிறுவனிடம் விசாரணை செய்தனர்.
ஆனால், எதுவும் அறியாத அந்த மழலைச் சிறுவனோ ஜாலியாக தனது காரில் அமர்ந்துக்கொண்டு ஹாயாக பேசியுள்ளான். பின்னர், அவனை ஆட்டோ ஏற்றியப் போலீஸார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பீக் ஹவர் எனப்படும் அதிகம் பிஸியான நேரத்தில் சிறுவன் காருடன் சாலையில் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவ்வளவு சிறிய குழந்தையிடம் காரைக் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் எங்கே சென்றார்கள் என்று சிறுவனின் பெற்றோர்களைச் சிலர் கரைத்துக் கொட்டவும் ஆரம்பித்தனர். மேலும், இச்சம்பவத்தில் சிறுவனின் பெற்றோர் வழக்கு பதியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!