Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 3 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஊரடங்கினால் ஹோண்டா சிட்டி காரை வீடாக மாற்றிக்கொண்ட 6 அடி பாம்பு.. இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ?
ஊரடங்கினால் பல நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்த ஹோண்டா சிட்டி காருக்குள் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதுகுறித்த தகவலை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
கொரோனா வைரஸினால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் மக்கள் அனைவரும் முக்கியமான பணியை தவிர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு சமீபத்தில் நீட்டிக்கப்பட்டிருந்ததால் இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு தொடரவுள்ளது.
மக்கள் பணிக்கு செல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் அவர்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் பல நாட்களாக ஒரு ஒரத்திலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒரு சிலர், பயன்படுத்தாததால் கழுவி சுத்தம் செய்வதற்கு கூட வாகனத்தை தொடுவதில்லை.
பைக்கென்றால் பரவாயில்லை. அருகே உள்ள சந்தைக்கு எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. கார்கள் தான் பாவம். தினமும் ஒருவேளையாவது பயன்படுத்தப்பட்டுவிடுகின்ற பைக்குகளே ஊரடங்கினால் பழுதாகி மெக்கானிக் கடைகளைக்கு குவிந்து வருகின்ற செய்தியினை பார்த்திருப்போம்.
கார்கள் என்ன நிலையில் உள்ளன என்பதை ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்பு தான் தெரியும். அப்படி ஊரடங்கினால் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்றை 6 அடி நீளமுள்ள பாம்பு தனது வீடாக மாற்றி கொண்டு பயன்படுத்தி வந்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றுள்ள இடம் ஹரியானா மாநிலம் கர்னல் ஆகும். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் பாம்பு காரின் சஸ்பென்ஷனை சுற்றி கொண்டுள்ளது. முதலில் பாம்பு காருக்குள் நுழைவதை தான் அங்கு இருந்தவர்கள் பார்த்திருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த வீடியோவின் ஆரம்பத்தில் காருக்குள் பாம்பு உள்ளது என்று தான் மாறி மாறி கூறி கொள்கிறார்களே தவிர்த்து மற்றப்படி யவருக்கும் பாம்பு காருக்குள் எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு இடமாக தேட ஆரம்பிக்கின்றனர்.
காரின் பொனெட் உள்பட அவர்கள் முடிந்த அளவிற்கு தேடியும் பாம்பை கண்டுப்பிடிக்க முடியாததால் சில உதவியாளர்களை நாடுகின்றனர். அதாவது காரின் உரிமையாளர் உள்பட சிலர் காரை பாம்புடனே அருகில் இருந்து கார் வாஷ் செய்யும் இடத்திற்கு ஓட்டி சென்று காரின் அடிப்பகுதியில் தேட ஆரம்பிக்கின்றனர்.
அப்போது தான் அவர்களுக்கு பாம்பு சஸ்பென்ஷன் பகுதியில் காட்சியளித்துள்ளது. உடனே பாம்பை வெளியே எடுத்தவர்கள் அதனை அருகில் இருந்த பகுதிகளுள் விடுகின்றனர். இவ்வாறு காருக்குள் பாம்பு புகுந்து கொள்வது இந்தியாவில் இது ஒன்றும் முதல்முறையல்ல. இது போன்ற நிகழ்வுகளை இதற்கு முன்னரும் பல முறை பார்த்துள்ளோம்.
ஏனெனில் பாம்புகளின் இரத்தம் குளிர்ச்சியானவை. இதனால் அவை வெப்பம் மிகுந்த இடங்களிலேயே தங்குவதற்கு விருப்பப்படுகின்றன. அதற்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் மிக சரியான தேர்வாகும். எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு காரை இயக்கவுள்ளீர்கள் என்றால் காரில் அமர்வதற்கு முன்னர் காரின் பொனெட், விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்ட இடங்களில் பாம்பு ஏதேனும் குடியிருந்து வருகிறதா என்பதை ஒரு முறை சரிப்பார்த்து கொள்ளுங்கள்.