Just In
- 2 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
7 பேரின் உயிரை பறித்த கார் ஹேண்ட்பிரேக்... உஷார் மக்களே!!
கார் ஓட்டும்போதும் சரி, காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதும் சரி, சிறிய கவனக்குறைவு கூட பெரிய விபத்துக்களை ஏற்படுத்திவிடும். அந்த விதத்தில், டெல்லி அருகே நடந்த கோர விபத்தும், கார் வைத்திருப்பவர்களுக்கு
கார் ஓட்டும்போதும் சரி, காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதும் சரி, சிறிய கவனக்குறைவு கூட பெரிய விபத்துக்களை ஏற்படுத்திவிடும். அந்த விதத்தில், டெல்லி அருகே நடந்த கோர விபத்தும், கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் சம்பவமாக அமைந்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவரது மகனுக்கு டெல்லி அருகே உள்ள காஸியாபாத் நகரில் திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து, ஓம் பிரகாஷ் தனது குடும்பத்தினர் 11 பேருடன் டாடா சுமோ காரில் காஸியாபாத் நகருக்கு சென்றனர்.
காஸியாபாத் நகரை நெருங்கிவிட்ட நிலையில், விஜய்நகர் என்ற பகுதியில் சிறு ஓய்வுக்காக டிரைவர் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி இருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில், சாலை ஓர பள்ளத்தில் கார் உருள துவங்கி இருக்கிறது.
காரில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பி கூச்சல் போட்டுள்ளனர். ஆனால், ஒரு சில வினாடிகளில் கார் அந்த கிடுகிடு பள்ளத்தில் கவிழந்து அங்கிருந்த நீர் நிலையில் கவிழ்ந்துவிட்டது.
இந்த பயங்கர விபத்தில் காரிலிருந்த ஓம்பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். அருகிலிருந்துவர்கள் பள்ளத்தில் இறங்கி காரில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் காரின் முன்புறத்தில் அமர்ந்திருந்த குழந்தை காரின் ஹேண்ட்பிரேக்கை எடுத்துவிட்டுள்ளது. அதன்பிறகே கார் நகர்ந்து பள்ளத்தில் உருண்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்திற்கு பின்னர், கார் டிரைவர் மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கார் ஓட்டுனர்களும், காரில் பயணிப்பவர்களும் எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாகவே இருக்கிறது.
Picture credit: Bhaskar
ஹேண்ட்பிரேக் போட்டு நிறுத்தி வைத்திருக்கும்போது கூடவே காரை கியரில் நிறுத்தி வைப்பதும் அவசியம். புதிய கார்களில் ஹேண்ட்பிரேக் சிறப்பாக இருக்கும். ஆனால், பழைய கார்களில் ஹேண்ட்பிரேக் பற்சக்கரம் மற்றும் கேபிள் நைய்ந்து போய் இருக்கும்.
இதனால், சிறுவர்கள் கூட ஹேண்ட்பிரேக்கை எளிதாக எடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. காரில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இருக்கும்போது விளையாட்டாக ஹேண்ட்பிரேக்கை வைத்து ஆட வாய்ப்புண்டு.
அதுபோன்ற சமயங்களில் அதன் அபாயத்தை புரிய வையுங்கள். குழந்தைகளாக இருப்பின், ஹேண்ட்பிரேக்கில் அவர்களது கவனம் இல்லாதவாறும் அல்லது அதனை இயக்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
காரில் குழந்தைகளை விளையாட விட்டு ஷாப்பிக் செல்வதையும், வீட்டில் நிற்கும்போது குழந்தைகளை காரில் விளையாட விடுவதையும் தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், இதுபோன்ற விபத்துக்கள் தொடர்கதையாகிவிடும்.
சரிவான சாலைகளில் நிறுத்தும்போது சரியாக ஹேண்ட்பிரேக் போட்டு இருக்கிறோமா என்பதை ஒன்றுக்கு இருமுறை உறுதி செய்து கொள்வது அவசியம். சில வேளைகளில் ஹேண்ட்பிரேக்கை இழுத்துவிட்ட போதிலும், ஹேண்ட்பிரேக் பிடிப்பு இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஹேண்ட்பிரேக்கை போடாததால் விபத்துக்கள் நடைபெறுவது குறித்து அண்மை காலமாக பல செய்திகளை பார்க்க முடிகிறது. வேலைப்பளூ மற்றும் மன அழுத்தம் காரணமாக, பிற வேலைகளில் கவனம் செலுத்துவதால் காரில் ஹேண்ட் பிரேக் போடுவதற்கு பலர் மறந்து செல்வதால் பல விபரீதங்கள் நடப்பது குறித்து ஏற்கனவே நாம் பல செய்திகளை வழங்கி இருக்கிறோம்.
இனியாவது குழந்தைகள் அல்லது சிறுவர்களை காரில் அழைத்துச் செல்லும்போது மிக மிக கவனமாக இருப்பது அவசியம். இல்லையெனில், இதுபோன்ற விபரீதங்களில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது.
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?