Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல... ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா?
இருசக்கர வாகனத்தில் ராங்சைடில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. ராங் சைடில் சென்று விபத்தில் சிக்கினால் நஷ்ட ஈடு கிடையாது என விளக்கமளித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்.
சாலையில் வாகனத்தில் செல்லும் போது ஒரு விபத்து ஏற்பட்டால் அந்த விபத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய அந்த வாகனத்தை இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என் சட்டம் சொல்கிறது. ஒரு வாகனத்திற்கு மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். அதன் மூலம் ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் அதன் மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்த இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்
இந்நிலையில் சமீபத்தில் டில்லியில் நடந்த சாலை விபத்தில் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈட்டிற்கான பணத்தைப் பெற கோர்ட் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட நபர் சாலை விதிமுறைகளை மீறியிருந்ததால் அந்த பணம் அவருக்கு வழங்கப்படக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்று நடந்தது. அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் காரும் இருசக்கர வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் வாகனத்தை ஓட்டி வந்தவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்தவர் தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் டில்லி ரோகிணி கோட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் காரில் வந்தவர் வேகமாக வந்ததாகவும் அதனாலேயே விபத்து நடந்ததாகவும், இதனால் காரில் வந்தவர் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கோர்ட் இது குறித்து விசாரிக்க டிராபிக் போலீசாக்கு உத்தரவிட்ட நிலையில் டிராபிக் போலீசார் இது குறித்து விசாரித்தபோது தான் உண்மை வெளிவந்தது. விபத்து நடந்த இடத்தில் பைக்கில் வந்தவர்கள் தான் தவறான பாதையில் வந்துள்ளனர். காரில் வந்தவர் சரியான பாதையில் தான் வந்துள்ளார். மேலும் காரில் வந்தவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் தான் வந்துள்ளார்.
ஆனால் அவர் தவறான பாதையில் பைக் வரும் என எதிர்பார்க்கவில்லை. இதனால் விபத்து நடந்துள்ளது. எனத் தெரியவந்தது.இதையடுத்து கோர்ட் விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் மீதோ உரிமையாளர் மீதோ எந்த தவறும் இல்லை. பைக் தவறான பாதையில் சென்றே விபத்திற்குக் காரணம் அதனால் கார் ஓட்டுநர் அல்லது உரிமையாளரிடம் நஷ்டஈடு கேட்பதற்கு உரிமையில்லை. என உத்தரவிட்டது.
இந்தியாவைப் பொருத்தவரை சாலைகளில் இடதுபுறமாக மட்டுமே வாகனங்கள் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும். சாலையில் வலதுபுறம் பயணிப்பது சட்டப்படி குற்றம். இடதுபுறம் செல்லும் ஒருவருக்கு திடீரென வாகனம் எதிரே வருவது தெரியாது. இரவு நேரங்களில் இப்படியாக வாகனங்கள் வந்தால் அது சரியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதே கடினம். இரவு நேரத்தில் ஹெட்லைட் போட்டு வந்தாலும் அது நேரடியாகச் சரியாக வரும் வாகன ஓட்டிக்குக் கண்ணில் கூச்சத்தை ஏற்படுத்தும். அதனால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.
டில்லி கோர்ட்டில் இந்த தீர்ப்பு பலருக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. நேரத்தை மிச்சப்படுத்தத் தவறான பாதைகளில் பயணிக்க நினைப்பவர்கள் அங்கு விபத்தில் சிக்கினால் சட்டப்படி அவர்கள் இழுப்பிற்கு நஷ்ட ஈடு பெறும் தகுதியையும் இழப்பார்கள் எனச் சட்டம் சொல்கிறது. எப்பொழுதும் சாலைவிதிகளை மதித்து நடப்போம். விபத்துக்களைத் தவிர்ப்போம்
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!