Just In
- 34 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க
பிரதமர் மோடிக்காக 2 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் விலை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
செல்வாக்கு மிகுந்த உலக தலைவர்களில் ஒருவராக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் அரியணையில் வீற்றிருக்கும் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர் பயன்படுத்தும் கார், விமானம் என அனைத்து வாகனங்களிலும் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய நிலையில், ஏர் இந்தியாவின் போயிங்-747 (B747) விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்து வருகிறார். இது 'ஏர் இந்தியா ஒன்' விமானம் என குறிப்பிடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் போயிங்-747 விமானத்தில்தான் பயணம் செய்து வருகின்றனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பைலட்களால், போயிங்-747 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதே சமயம் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் (Air India Engineering Services Limited - AIESL), அந்த விமானங்களை பராமரித்து வருகிறது. விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக, பயணங்களுக்காக, இரண்டு போயிங்-747 விமானங்களை தற்போது ஏர் இந்தியா வைத்துள்ளது.
இந்த இரண்டு விமானங்களும் இதற்கு முன்பு, ஏர் இந்தியா நிறுவனத்தின் வணிக ரீதியிலான விமானங்களின் பட்டியலில்தான் இருந்தன. கடந்த 2018ம் ஆண்டில் ஒரு சில மாதங்கள், அவை வணிக ரீதியிலான சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. ஆனால் அதற்கு பின்பு அவை போயிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, விவிஐபி பயணங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டன.
ஆனால் கூடிய விரைவில், இந்த 2 விமானங்களும் மீண்டும் வணிக ரீதியிலான சேவைக்கு மீண்டும் திரும்ப உள்ளன. ஆம், அதற்கு பதிலாக விவிஐபிக்களின் பயணங்களுக்கு, இரண்டு புதிய போயிங்-777 (B777) விமானங்களை ஏர் இந்தியா வாங்கவுள்ளது. இந்த 2 விமானங்களும் வரும் செப்டம்பர் மாதம் ஏர் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் உச்சபட்ச அதிகார பதவிகளில் வீற்றிருக்கும் மற்ற முக்கிய நபர்களின் பயணங்களுக்காக ஏர் இந்தியா நிறுவனம் இந்த 2 புதிய போயிங்-777 விமானங்களை வாங்க உள்ளது. போயிங் நிறுவனம் இந்த 2 விமானங்களையும் வரும் செப்டம்பர் மாதத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டெலிவரி செய்யும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2020ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த இரண்டு விமானங்களும் ஏர் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும் என கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் அடுத்த மாதம் இந்த இரண்டு விமானங்களும் டெலிவரி செய்யப்படாது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காலதாமத்தால் வரும் செப்டம்பரில்தான் 2 விமானங்களும் ஏர் இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''எதிர்பாராதவிதமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கோவிட்-19 பிரச்னைதான் முக்கிய காரணம். எனவே வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த இரண்டு புதிய விமானங்களும் கிடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றனர். போயிங்-747 விமானங்களை போல, ஏர் இந்தியா பைலட்களால், போயிங்-777 விமானங்கள் இயக்கப்படாது.
அதற்கு பதிலாக இந்திய விமானப்படையை (IAF - Indian Air Force) சேர்ந்த பைலட்கள் மூலம்தான், புதிதாக வாங்கப்படவுள்ள போயிங்-777 விமானங்கள் இயக்கப்படும். ஆனால் போயிங்-747 விமானங்களை போலவே, புதிய போயிங்-777 விமானங்களும், ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தால்தான் பராமரிக்கப்படும்.
புதிய போயிங்-777 விமானங்கள் கிடைத்ததும், தற்போது உள்ள போயிங்-747 விமானங்கள் விவிஐபிக்களின் பயணங்களுக்கான சேவையில் இருந்து விலக்கப்படும். அதன்பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்தால், அவை வணிக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் புதிய விமானங்கள் விவிஐபிக்களின் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஏர் இந்தியா புதிதாக வாங்கவுள்ள 2 போயிங்-777 விமானங்களிலும், (LAIRCM - Large Aircraft Infrared Countermeasures) எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் எஸ்பிஎஸ் எனப்படும் செல்ஃப் ப்ரொடெக்ஸன் சூட் (SPS - Self-Protection Suites) ஆகிய அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டது. இதன் விலை 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு வசதிகளை தவிர சொகுசு வசதிகளிலும், போயிங்-777 விமானம் அமர்க்களப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் (கோவிட்-19) கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக கவர்னர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்கள், செலவுகளை குறைக்க உதவும் வகையில், புதிய கார் உள்ளிட்டவற்றை வாங்குவதை ஒத்தி வைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஏர் இந்தியா நிறுவனம் 2 புதிய விமானங்களை டெலிவரி பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் போன்றவர்கள் உயர்ந்த பதவிகளை வகித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிக பொருட்செலவில் இந்த 2 போயிங்-777 விமானங்களும் வாங்கப்படுகின்றன.
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!