Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..?
மிகப்பெரிய விமானம் சூரைக் காற்றில் சிக்கி தரையிறங்க முடியமால் தவிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில், விமானிகளின் முயற்சியை பலர் பாராட்டி வரும் வேலையில், நிர்வாகமே எதிர்வினையாக செயலாற்றியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஒரு சில நேரங்களில் இயற்கையின் அசாதாரணமான சூழ்நிலை மிகவும் சாதாரணமானவர்களைகூட மிகப்பெரிய ஹீரோக்களாக மாற்றிவிடுகின்றன. இதற்கு இணையத்தில் உலாவும் ஒரு சில வீடியோக்களே முக்கிய சான்றாக இருக்கின்றது.
அந்தவகையிலான ஓர் வீடியோதான் தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. குறிப்பிட்ட வீடியோவில், கடுமையான சூறைக் காற்றில் சிக்கிய விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கு முன்னர் அந்த விமானத்தின் விமானிகள் சந்தித்த இன்னல்களைப் பற்றி விளக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.
லண்டனின் ஹெத்ரோவ் விமான நிலையத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அந்த விமானம் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இது, உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக இருக்கும் ஏர்பஸ் ஏ380 வகையைச் சார்ந்ததாகும்.
மேலே கூறியபடி, இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை விமானிகள் கடுமையான சூரைக்காற்றில் போராடி விமானத்தை தரையிறக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக, விமானம் ஓடு தளத்தை நெருங்கியபோது காற்றின் வேகம் கடுமையானதால் விமானம் குறுக்காக தரையிறங்கியது.
இந்த சூழ்நிலையில், விமானத்தை குறுக்காக தரையிறக்கினால் அது பேராபத்தை விளைவித்துவிடும் என்பதால் விமானிகள், அந்த விமானத்தை கடுமையாக முயற்சித்து நேராக திருப்பினர். இருப்பினும், காற்றின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் விமானம் மீண்டும் மீண்டும் குறுக்காகவே திரும்புகின்றது.
இந்த ஒட்டுமொத்த போராட்டமும் ஹெத்ரோவ் விமான நிலையத்தில் பொருத்தியிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் விமானிகளின் சாதூர்யமான செயல்பாட்டை பாராட்டி மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் விமான நிறுவனமோ எதிர்வினையில் செயல்பட்டுள்ளது. அந்த விமானிகளுக்கு விமான போக்குவரத்து நிறுவனம் மெமோ ஒன்றை வழங்கியுள்ளது.
அந்த மெமோவில் சூறைக் காற்றின் போது விமானியின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த வீடியோவில், சூறைக் காற்றுக்கு எதிரான விமானிகளின் கடும் போராட்டம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் முழுமையான திருப்தியில்லாதவாறே அது கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், விமானிகளின் தீவிர முயற்சியை பாராட்டும் விதமாக இணைய வாசிகள் பலர் தங்களின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.
ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகமோ அந்த விமானியை தூற்றும் விதமாக மெமோ அனுப்பி வைத்துள்ளது. அதில், "கடந்த வாரத்தில் எங்கள் ஏ380 விமானம் மிக மோசமான சூரைக் காற்றில் சிக்கி தரையிறங்க போராடுவதை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். ஆனால், எங்களின் பயிற்சித்துறையின் பார்வைக்கு இது மிவும் சாதாரணமான ஒன்றே. நாங்கள் இதை பார்க்க விரும்பவில்லை. இதையும் தாண்டி அதிகமாக விமானிகளிடத்தில் எதிர்பார்க்கின்றோம்" என தெரிவித்திருந்தது.
அதாவது, அந்த கடுமையான சூரைக் காற்றிலும் மிகவும் சுலபலமாக அந்த விமானத்தை விமானிகள் தரையிறக்கியிருக்க வேண்டும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
ஆனால், இதுபோன்ற சமயங்களில் பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் வானுக்கே சென்றிருப்பதை நாம் இதற்கு முன்பாக கண்டிருப்போம்.
பொதுவாக, இதுபோல சூரைக் காற்றில் விமானங்களை தரையிறக்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது மிகவும் ஆபத்தான ஒன்று. அதிலும், மிகப்பெரிய விமானம் என்றால் சற்று கூடுதல் சிக்கல்தான். கடந்த காலங்களில் இதுபோன்ற காரணத்தால் விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தை தாண்டிச் சென்று தரையிறங்கி விபத்தைச் சந்தித்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி