Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Movies தனுஷை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. அய்யய்யோ ரஜினி உறவினர் என்ன இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..?
மிகப்பெரிய விமானம் சூரைக் காற்றில் சிக்கி தரையிறங்க முடியமால் தவிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில், விமானிகளின் முயற்சியை பலர் பாராட்டி வரும் வேலையில், நிர்வாகமே எதிர்வினையாக செயலாற்றியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஒரு சில நேரங்களில் இயற்கையின் அசாதாரணமான சூழ்நிலை மிகவும் சாதாரணமானவர்களைகூட மிகப்பெரிய ஹீரோக்களாக மாற்றிவிடுகின்றன. இதற்கு இணையத்தில் உலாவும் ஒரு சில வீடியோக்களே முக்கிய சான்றாக இருக்கின்றது.
அந்தவகையிலான ஓர் வீடியோதான் தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. குறிப்பிட்ட வீடியோவில், கடுமையான சூறைக் காற்றில் சிக்கிய விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கு முன்னர் அந்த விமானத்தின் விமானிகள் சந்தித்த இன்னல்களைப் பற்றி விளக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.
லண்டனின் ஹெத்ரோவ் விமான நிலையத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அந்த விமானம் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இது, உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக இருக்கும் ஏர்பஸ் ஏ380 வகையைச் சார்ந்ததாகும்.
மேலே கூறியபடி, இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை விமானிகள் கடுமையான சூரைக்காற்றில் போராடி விமானத்தை தரையிறக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக, விமானம் ஓடு தளத்தை நெருங்கியபோது காற்றின் வேகம் கடுமையானதால் விமானம் குறுக்காக தரையிறங்கியது.
இந்த சூழ்நிலையில், விமானத்தை குறுக்காக தரையிறக்கினால் அது பேராபத்தை விளைவித்துவிடும் என்பதால் விமானிகள், அந்த விமானத்தை கடுமையாக முயற்சித்து நேராக திருப்பினர். இருப்பினும், காற்றின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் விமானம் மீண்டும் மீண்டும் குறுக்காகவே திரும்புகின்றது.
இந்த ஒட்டுமொத்த போராட்டமும் ஹெத்ரோவ் விமான நிலையத்தில் பொருத்தியிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் விமானிகளின் சாதூர்யமான செயல்பாட்டை பாராட்டி மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் விமான நிறுவனமோ எதிர்வினையில் செயல்பட்டுள்ளது. அந்த விமானிகளுக்கு விமான போக்குவரத்து நிறுவனம் மெமோ ஒன்றை வழங்கியுள்ளது.
அந்த மெமோவில் சூறைக் காற்றின் போது விமானியின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த வீடியோவில், சூறைக் காற்றுக்கு எதிரான விமானிகளின் கடும் போராட்டம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் முழுமையான திருப்தியில்லாதவாறே அது கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், விமானிகளின் தீவிர முயற்சியை பாராட்டும் விதமாக இணைய வாசிகள் பலர் தங்களின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.
ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகமோ அந்த விமானியை தூற்றும் விதமாக மெமோ அனுப்பி வைத்துள்ளது. அதில், "கடந்த வாரத்தில் எங்கள் ஏ380 விமானம் மிக மோசமான சூரைக் காற்றில் சிக்கி தரையிறங்க போராடுவதை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். ஆனால், எங்களின் பயிற்சித்துறையின் பார்வைக்கு இது மிவும் சாதாரணமான ஒன்றே. நாங்கள் இதை பார்க்க விரும்பவில்லை. இதையும் தாண்டி அதிகமாக விமானிகளிடத்தில் எதிர்பார்க்கின்றோம்" என தெரிவித்திருந்தது.
அதாவது, அந்த கடுமையான சூரைக் காற்றிலும் மிகவும் சுலபலமாக அந்த விமானத்தை விமானிகள் தரையிறக்கியிருக்க வேண்டும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
ஆனால், இதுபோன்ற சமயங்களில் பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் வானுக்கே சென்றிருப்பதை நாம் இதற்கு முன்பாக கண்டிருப்போம்.
பொதுவாக, இதுபோல சூரைக் காற்றில் விமானங்களை தரையிறக்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது மிகவும் ஆபத்தான ஒன்று. அதிலும், மிகப்பெரிய விமானம் என்றால் சற்று கூடுதல் சிக்கல்தான். கடந்த காலங்களில் இதுபோன்ற காரணத்தால் விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தை தாண்டிச் சென்று தரையிறங்கி விபத்தைச் சந்தித்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே