Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பரிசாக கிடைக்க உள்ள பல லட்சம் மதிப்புள்ள கார்: பெறவிருக்கும் பிரபல நடிகையின் கணவர் யார் தெரியுமா...?
பிரபல பாலிவுட் திரைப்பட நடிகையின் கணவருக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
பாலிவுட் பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண்ஜோஹர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'காபி வித் கரண்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், திரைப்படம், சின்னத்திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறுத்துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் கலந்துக்கொண்டு வருகின்றார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் நடைபெறும் இந்த பேச்சு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களிடம், நகைச்சுவை உரையாடல் மற்றும் அவர்கள் மறைத்த சில சுவாரஷ்யமான தகவல்களைப் பற்றி கேட்கப்படும். சில சமயங்களில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்படும். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துக்கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பாண்டியாவும், கே.எல். ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருவரும் மன்னிப்புக் கோரினார்கள். இதற்கு கரண் ஜோஹரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. ஆனாஸ், இருவரும் செய்தது தவராக இருந்தாலும், அணியைவிட்டு நீக்கியது தவறு என்று கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல். ராகுல் மீதான தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி உலகளவில் பிரபலமடைந்தது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் திரைப்பட நடிகருமான, காஜேலின் கணவருமான அஜய் தேவ்கான் சமீபத்தில் கலந்துக்கொண்டார். இவர், டால்க் ஷோவில் மிகவும் சிறப்பாக பங்கேற்றதாக கூறி அந்த தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ5 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக அளித்துள்ளது.
ஆடி காரின் ஏ5 ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விலையில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள இந்த கார், 4 வேரியண்ட்களில் இந்தியக் கார் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஆடி நிறுவனம் ஏ5 காரை மேம்படுத்தி 2018ம் ஆண்டுவெளியிட்டது. அதன்படி, அதில் பனோரமா சன்ரூஃப், முழுக்க முழுக்க எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் ஆடி எம்எம்ஐ உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் புதிதாக சேர்த்துள்ளது.
டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே ஆடி ஏ5 ஸ்பேர்ட்பேக் மாடல் கார் கிடைக்கின்றது. அதன்படி, 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் டீசல் என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 188பிஎச்பியையும், 400என்எம் டார்க்யூவையும் வெளிப்படுத்தும். மேலும், இதன் எஞ்ஜின் 7 ஸ்பீட் டூவல்-கிளட்ச் டிப்ட்ரானிக் டிரான்ஸ்மிஸன் திறனில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 7.9 செகன்ட்ஸில் 100 கிமீ வேகத்தத் தொடும் சக்தி வாய்ந்தது. மேலும், இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 235 கிமீ வேகம் செல்லக்கூடியது. இந்த காரில் மேலும் சிறப்பம்சமாக முன்பக்க வீல்கள் இயக்கம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்த டால்கே ஷோ தொடங்கியது. இதுவரை 5 சீசன்கள் முடிவுற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் 6வது சீசனும் இம்மாதம் 10ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால், இந்த டால்க் ஷோவில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி இந்த தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, இத்தகைய சிறப்பு பெற்ற ஆடி ஏ5 காரை அஜய் தேவ்கானுக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பரிசாக அளித்துள்ளது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...