Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹை-கோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!
8 நாட்களுக்கு பிறகு மீண்டும் அமர ராஜா பேட்டரி நிறுவனம் உற்பத்தி பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவின் மிக பிரபலமான பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று அமர ராஜா. இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கார்காம்பாடி மற்றும் நுனெகுண்டலப்பள்ளி ஆகிய இரு பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றது.
இவ்விரு ஆலைகளிலும் உற்பத்தி பணியை உடனடியாக நிறுத்துமாறு ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பத்திருந்தது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதனால், அனைத்து பணிகளும் உடனடியாக நிறுத்தும் நிலை உருவாகியது.
ஆகையால், மாநில அரசின் உத்தரவை எதிர்த்து அமர ராஜா நிர்வாகும் அம்மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை விசாரித்து வந்த நீதிமன்றம், ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கின்றது.
இதனால், கார்காம்பாடி மற்றும் நுனெகுண்டலப்பள்ளி ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள உற்பத்தி ஆலையிலும் மீண்டும் தயாரிப்பு பணிகளை நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. மே 8ம் தேதியில் இருந்தே நிறுவனம் உற்பத்தி பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி பணிகளை தொடங்கிய பின்னர் வரும் காலங்களில் மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு எந்தவொரு தடையுமின்றி அனைத்து பொருட்களும் சப்ளை செய்யப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்துள்ளது.
அமர ராஜா நிறுவனம் அதன் பேட்டரிகளை அசோக் லேலேண்ட், ஃபோர்டு இந்தியா, ஹோண்டா, ஹூண்டாய், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, இந்திய பெருங்கடலைச் சார்ந்திருக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் அதன் பேட்டரியை ஏற்றுமதி செய்து வருகின்றது. வாகனங்களுக்கு பேட்டரி உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கும் அமர ராஜா நிறுவனத்தின்கீழ் 16 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆந்திர அரசின் திடீர் உத்தரவால் இவர்களின் வேலை பறிபோகும் சூழ்நிலையில் இருந்தது. இந்த நிலையிலேயே கணிசமான கட்டுப்பாட்டுகளுடன் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை தொடர ஆந்திர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!