Just In
- 41 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சிட்டி டிராப்கில் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்
ஆம்புலன்ஸ் சைரன் போட்டு சென்றால் எல்லோரும் அந்த வாகனத்திற்காக வழி விட வேண்டும் தான். ஆனால் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடியில் எல்லா இடங்களிலும் இது சாத்தியப்படாத ஒன்று.
ஆம்புலன்ஸ் சைரன் போட்டு சென்றால் எல்லோரும் அந்த வாகனத்திற்காக வழி விட வேண்டும் தான். ஆனால் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடியில் எல்லா இடங்களிலும் இது சாத்தியப்படாத ஒன்று. இந்த வகையில் கேரளாவில் சிட்டி டிராபிக்கில் 60 கி.மீ. வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸிற்கு மக்கள் வழிவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்திய ரோடுகள் பெரும்பாலும் வாகன நெருக்கடி நிறைந்த ரோடுகள் தான். இந்திய டிரைவர்கள் பெரும்பாலும் லேன் முறையை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. இதனால் பல நேரங்களில் அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்களாக ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம், போலீஸ் வாகனங்களும் அவ்வபோது டிராபிக்கில் சிக்குவதை பார்த்திருப்போம்.
இந்தியா போன்ற பெரும் ஜனத்தொகை கொண்ட நாட்டில் இவ்வாறான நெருக்கடியை சமாளிப்பதது மிகப்பெரிய கடினம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒழுக்கத்ததை கொண்டு வந்தால் மட்டும் இந்த பிரச்னையை ஒரளவிற்காகவாது சமாளிக்க முடியும். சமீபகாலமாக மீடியாக்களின் தாக்கத்தால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எண்ணம் வந்து விட்டது.
அதை நாம் உணரும் விதமாக கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸிற்கு காரில் செல்பவர்கள் வழி விடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. அது காண்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. இந்தியர்கள் மத்தியில் ஆம்புலன்ஸிற்கு வழிவிட வேண்டும் என இவ்வளவு தூரம் விழிப்புணர்வு வந்துவிட்டாத என்று தோன்றுகிறது. இது போன்ற காட்சியை இந்தியா போன்ற வேறு நாடுகளில் பார்ப்பது சிரமம்.
கேரளாவில் உள்ள ஒரு ஆம்புலன்ஸின் டேஸ் போர்டில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சி. இதில் ஆம்புலன்ஸ் சிங்கிள் லேன் உள்ள பிரிக்கப்படாத ரோட்டில் பயணம் செய்கிறது. சைரன் சத்தம் மற்றும் தொடர் ஹாரன் ஒலித்து கொண்டே வேகமாக ஆம்புலன்ஸ் செல்கிறது.
எவ்வளவு வேகம் என சொல்ல முடியாவிட்டாலும், சுமார் 60 கி.மீ. வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்கிறது என கணிக்க முடிகிறது. இந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சைரன் மற்றும் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டு முன்னே செல்லும்வாகன ஓட்டிகளை எச்சரித்து சென்றதால் ஆம்புலன்ஸிற்கு எல்லா வாகன ஓட்டிகளும் வழிவிட்டனர்.
இது போன்ற சம்பவத்தை இந்தியாவில் பார்ப்பது மிகவும் சிரமம், வாகன ஓட்டிகளே ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும் என நினைத்தாலும், இங்குள்ள வாகன நெருக்கடியில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் டிராப்பிக்கில் சிக்கும் நிலையை தான் இங்கே பார்க்க முடியும்.
இந்நிலையில் கேரள மாநிலம் இந்த இரண்டு வாகனங்களும் விரைவாக செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவசர வாகளுக்கான கிரீன் காரிடார் என்ற பாதையை உருவாக்கி வருகிறது. முக்கியமாக உடல் உறுப்புகள் தானம் செய்யும் போது வாகனங்கள் விரைவாக செல்ல இந்த பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கேராளாவில் உடல் உறுப்பு தானத்திற்காக 516 கிலோ மீட்டரை வெறும் 7 மணி நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. தற்போது கரீஸ் காரிடார் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இது மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் அவர்கள் ஆம்புலன்ஸிற்கு ஆச்சரிப்படுத்தும் வகையில் வழிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இது கேரளாவில் நடக்கும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இது போன்ற பல நிகழ்வுகள் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இதற்கான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
அவசர கால வாகனங்களுக்கு வழி விட வேண்டியது. ரோட்டில் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரின் கடமை. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அங்கு ஒரு உயிர் துடித்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும். ரோட்டில் உள்ள டிராப்பிக்கில் அவசர கால வாகனங்கள் சிக்கிய காரணத்தால் கூட உயிரிழப்புகள் ஏற்படலாம்.
இந்தியாவில் அவசர கால வாகனங்களாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், போலீஸ் வாகனம் ஆகிய வாகனங்கள் சைரன் போட்டு கொண்டு செல்லும் போது அந்த வாகனத்திற்க வழி விடாத வாகனங்களுக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என சட்டம் உள்ளது.
ஆனால் இவ்வாறு யாருக்காவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்வி குறி தான். ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வர வேண்டும். அதற்காக அரசும் களப்பணியாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி