Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ் மொழி ஆற்றல் மிக்கது... வைரலான தமிழ் மொழி பற்றிய ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
பொங்கல் திருநாளன்று தமிழ் மொழியின் திறன் குறித்து ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் ஒன்று வைரலாகி இருக்கிறது. அவர் தான் கற்றுக் கொண்ட முதல் தமிழ் வார்த்தை குறித்த அந்த ட்வீட் சமூக வலைதளங்களிலும் வைரலானதுடன், பல்வேறு மொழிகளை சேர்ந்தோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, ட்விட்டரில் அவரது நகைச்சுவையும், சிந்தனையும் கலந்த ட்வீட்டுகளுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில், தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையான நேற்று அவர் தமிழ் மொழியின் திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்ட ஒரு ட்வீட் வைரலாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கல்வி பயிலும்போது அவர் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை குறித்து அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் தமிழகத்தில் படிக்கும்போது போடா டேய் என்ற வார்த்தையைத்தான் முதலில் கற்றுக் கொண்டேன்.
இந்த வார்த்தையை எனது வாழ்நாளில் பல சமயங்களில் நான் பயன்படுத்தி உள்ளேன். சில சமயங்களில் உரக்கவும், சில சமயங்களில் மனதிற்குள்ளே இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறேன்.
தமிழ் ஒரு ஆற்றல் வாய்ந்த மொழி. ஆங்கிலத்தில் யாரிடமாவது உங்களது பேச்சை கேட்பதற்கோ அல்லது உங்களது கருத்தை அறிவதற்கோ நேரமில்லை. என்னை தனியாக விட்டுவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு பாராட்டுக்கள் என்று சொல்வதற்கு பதிலாக தமிழில் ஒரே வார்த்தையில் 'போடா டேய்' என்று சொல்லிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துமட்டுமில்லாமல், இந்த ட்வீட்டில் ஒருவர் வந்து கேட்ட கேள்விக்கும் நகைச்சுவையுடன் ஒரு பதிலை அளித்துள்ளார். ரெங்கசாமி ராஜா என்பவர், எந்தவொரு புதிய மொழியை கற்றுக்கொள்ளும்போது சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்தே கற்றுவிடுவோம். அதேபோன்று, நீங்கள் சில கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கமென்ட் செய்துள்ளார்.
இதற்கு தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையுடன் ஆமோதித்துள்ளார். சென்னையில் எனது தார் எஸ்யூவி காரில் செல்லும்போது யாராவது இடித்துவிட்டால் அவர்களை திட்டுவதற்கு நிறைய தமிழ் கெட்டவார்த்தைகளை கற்று வைத்துள்ளேன் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலை செல்லும் பாதை குறித்து அவர் பகிர்ந்த படமும், தகவலும் பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கும் அவருக்கும் உரிய பந்த பாசத்துடன் ஒரு புதிய ட்வீட்டை போட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆட்டோமொபைல் துறை மற்றும் வாகனங்கள் குறித்தும் அவர் ஏராளமான ட்வீட்டுகளை நகைச்சுவை கலந்து தனது பாணியில் பதிவிட்டு வருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டுகள் நகைச்சுவையும், சிந்தனை உணர்வும் எல்லோராலும் சிலாகித்து கூறப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டிற்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?