Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
சட்டத்திற்கு புறமாக மோட்டார்சைக்கிள் ஓட்டிய நபரின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை கிளப்பிய இந்த வீடியோவினை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.
அபாயகரமான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பிரபலமாகிவிடும். இதற்கு உதாரணங்களாக பல வீடியோக்களை இதற்குமுன் நம் செய்திதளத்தில் பார்த்துள்ளோம். அவ்வாறான வீடியோக்களில் ஒன்று தான் தற்போது மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவின் பார்வையில் பட்டுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய தொழிலதிபர் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இணையத்தில் வைரலாகும் விஷயங்களை அவ்வப்போது தனது டுவிட்டர் பதிவில் பதிவிடுவார். இம்முறை வேறொருவது பதிவிற்கு தனது கருத்தை தெரிவிப்பதுபோல் இந்த வீடியோவினை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்டுள்ள வீடியோவினை பதிவிட்டவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை கிண்டலடிக்கும் விதமாக இதனை வெளியிட்டுள்ளார். உலகளவில் பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழைய கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது.
தொழிற்சாலை நிறுவதற்கான இடம் இந்தியாவில் கர்நாடகாவில் அமைய உள்ளதாக கூட கூறப்பட்டது. ஆனால் எதிலிலும் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை. டெஸ்லாவின் ஓட்டுனர் இல்லா கார் சேவைக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆக மொத்தத்தில் ஆளில்லாமல் இயங்கும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் உலகளவில் பிரபலமாகிவிட்டன.
டெஸ்லாவின் ஆளில்லாமல் இயங்கும் வாகனங்களை குறிப்பிட்டுதான் அஜயிட்டா என்ற இணையவாசி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திரா இதற்கு, "இது எனக்கு பிடித்துள்ளது... நான் ஒரு பயணி, நண்பர்களே... டிரைவர் அவரது இருப்பிடத்தில் இல்லை" என நகைச்சுவையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது பிரபல இந்தி பாடலாம்.
இந்த வீடியோவினை ஆனந்த் மஹிந்திராவை போல் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், பலர் இந்த நபரது செயலுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். ஏனெனில் இவ்வாறான ஸ்டண்ட்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிப்பது இல்லை. இத்தனைக்கும் இந்த நபர் ஹெல்மெட் கூட அணியவில்லை. இதையெல்லாம் பார்த்து கொதிந்து போன சிலர் உடனடியாக இந்த நபருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு பலர் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, "ஆம் நான் சரியாக தான் கூறியுள்ளேன். நான் பயணி, ஓட்டுனர் அவரது இருப்பிடத்தில் இல்லை, ஹெல்மெட்டும் இல்லை" என சமாளித்து மற்றொரு ட்விட்டை பதிவிட்டுள்ளார். இவ்வாறான ஸ்டண்ட்களை யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.
ஏனெனில் இவ்வாறான செயல்களினால் எந்தவொரு பயனும் இல்லை. நமக்கு காயம் ஏற்படுவது மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். சாதாரண பயணங்களின்போதே ஹெல்மெட் அணியாதது குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான மோட்டார்சைக்கிள் பயணிகளின்போது நிச்சயம் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும்.
ஒருவேளை இந்த நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தால், ஹெல்மெட் அணியாததை முக்கிய குற்றமாக எடுத்து கொள்வர். போலீஸார் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கருத்தாகும். ஏனெனில் இவரை போன்று எல்லாரும் பொது சாலையில் ஸ்டண்ட் செய்ய ஆரம்பித்தால் நாடு தாங்காது.
அதுமட்டுமில்லாமல் சாலையில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும். ஏனெனில் கடந்த ஆண்டில் பதிவான சாலை விபத்துகளில் இறந்தோரின் எண்ணிக்கை 1.20 லட்சமாகும். இவ்வாறான செயல்களை உலகிற்கு வெளிக்காட்டுவதில் இணையம் மிக முக்கிய பங்காற்றுகிறது. உதாரணத்திற்கு இந்த நிகழ்வு கூட யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிடவில்லை என்றால் நமக்கு தெரிந்திருக்காது.
இதனால் இந்த நபர் மேலும் மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக நடந்து கொள்ளலாம். ஆனால் உண்மையில் இணையமும் இவ்வாறான செயல்களுக்கு ஒரு காரணமாகும். அதாவது, இந்த நபருக்கு இவ்வாறான யோசனை தோன்றி இருப்பதற்கே வேறொருவர் பதிவு செய்த வீடியோ தான் காரணமாக இருக்கக்கூடும்.
இவ்வாறான விதிகளை மீறுவோரின் வீடியோக்களை சமீப காலமாக அடிக்கடி பார்த்து வருகின்றோம். கடந்த செப்டம்பர் மாதத்தில் இதய நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை கிட்டத்தட்ட 5 கிமீ தூரத்திற்கு வழி மறித்தவாறு கார் ஓட்டிய இன்னோவா கார் உரிமையாளர் நெட்டிசன்களின் எதிர்ப்பை பெற்றிருந்தார்.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!