Just In
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 11 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ
சாதாரண இந்திய விவசாயி ஒருவரின் அரிய கண்டுபிடிப்பு, ஆனந்த் மஹிந்திராவின் ஒரு டிவிட் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் டூவீலர், கார் மற்றும் டிராக்டர் உள்பட பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் உலகம் முழுக்க பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளன.
வாகன உற்பத்தி மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் மஹிந்திரா குழுமம் கொடி கட்டி பறந்து வருகிறது. இதற்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சாதிக்க துடிக்கும் பல கோடி இளைஞர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்.
சமூக வலை தளங்களில் ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். குறிப்பாக டிவிட்டரில் இவர் போடும் டிவிட்கள் லைக்ஸ் அள்ளும். பல கோடிகளுக்கு அதிபதி என்றாலும், சாதாரண மனிதர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் குணம் இவருக்கு உண்டு.
இந்த சூழலில் ஆனந்த் மஹிந்திரா தற்போது டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விவசாயி ஒருவர், அறுவடைக்கு பின் தனது நிலத்தில் இருந்த தானியங்கள் உள்ளிட்டவற்றை டிராக்டர் மூலமாக இடம் மாற்றி கொண்டுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற பணிகள் கைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு, அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இயந்திரங்கள் இன்னும் சென்று சேரவில்லை. இந்திய விவசாயிகளை பொறுத்தவரை டிராக்டர்தான் அதிநவீன இயந்திரம், வாகனம் எல்லாம்.
இந்திய விவசாயிகள் பலர் உழவு பணிகளுக்கு டிராக்டரை பயன்படுத்துகின்றனர். டிராக்டரை தவிர சொல்லி கொள்ளும்படியாக வேறு இயந்திரங்கள் எதையும் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் நாம் காணும் விவசாயி, தனது டிராக்டரை மாடிஃபிகேஷன் செய்திருந்தார். இதன்படி அவர் தனது டிராக்டரின் முன்பகுதியில் செயற்கையான இயந்திர கை ஒன்றை பொருத்தியிருந்தார். அதனுடன் கட்டில் இணைக்கப்பட்டிருந்தது.
ஆம், கட்டில்தான். இதன்மூலமாக பொருட்களை மிக எளிதாக அந்த விவசாயி இடம்மாற்றி கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கு எக்ஸ்காவேட்டர் (Excavator) போலவே உள்ளது. ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டை நீங்கள் கீழே காணலாம்.
|
''தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்ற சொற்தொடர் இந்தியர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன். நமது பண்ணை மற்றும் கட்டுமான துறைகள் எக்ஸ்காவேட்டருக்கு மாற்றாக இந்த புதிய தயாரிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்'' எனவும் ஆனந்த் மஹிந்திரா அந்த பதிவில் கூறியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவிட்டர் பதிவால் பலரும் ஈர்க்கப்பட்டனர். இந்த கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ-டிவிட்களை ஆனந்த் மஹிந்திராவின் டிவிட் குவித்திருந்தது.
ஆனால் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? என்பது தெளிவாக தெரியவில்லை. இதே வீடியோவை சாதாரண நபர்கள் யாரேனும் பதிவிட்டிருந்தால் இவ்வளவு அதிகமான பேரை சென்றடைந்திருக்குமா? என்பதும் சந்தேகமே.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா