Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ
சாதாரண இந்திய விவசாயி ஒருவரின் அரிய கண்டுபிடிப்பு, ஆனந்த் மஹிந்திராவின் ஒரு டிவிட் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் டூவீலர், கார் மற்றும் டிராக்டர் உள்பட பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் உலகம் முழுக்க பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளன.
வாகன உற்பத்தி மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் மஹிந்திரா குழுமம் கொடி கட்டி பறந்து வருகிறது. இதற்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சாதிக்க துடிக்கும் பல கோடி இளைஞர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்.
சமூக வலை தளங்களில் ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். குறிப்பாக டிவிட்டரில் இவர் போடும் டிவிட்கள் லைக்ஸ் அள்ளும். பல கோடிகளுக்கு அதிபதி என்றாலும், சாதாரண மனிதர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் குணம் இவருக்கு உண்டு.
இந்த சூழலில் ஆனந்த் மஹிந்திரா தற்போது டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விவசாயி ஒருவர், அறுவடைக்கு பின் தனது நிலத்தில் இருந்த தானியங்கள் உள்ளிட்டவற்றை டிராக்டர் மூலமாக இடம் மாற்றி கொண்டுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற பணிகள் கைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு, அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இயந்திரங்கள் இன்னும் சென்று சேரவில்லை. இந்திய விவசாயிகளை பொறுத்தவரை டிராக்டர்தான் அதிநவீன இயந்திரம், வாகனம் எல்லாம்.
இந்திய விவசாயிகள் பலர் உழவு பணிகளுக்கு டிராக்டரை பயன்படுத்துகின்றனர். டிராக்டரை தவிர சொல்லி கொள்ளும்படியாக வேறு இயந்திரங்கள் எதையும் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் நாம் காணும் விவசாயி, தனது டிராக்டரை மாடிஃபிகேஷன் செய்திருந்தார். இதன்படி அவர் தனது டிராக்டரின் முன்பகுதியில் செயற்கையான இயந்திர கை ஒன்றை பொருத்தியிருந்தார். அதனுடன் கட்டில் இணைக்கப்பட்டிருந்தது.
ஆம், கட்டில்தான். இதன்மூலமாக பொருட்களை மிக எளிதாக அந்த விவசாயி இடம்மாற்றி கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கு எக்ஸ்காவேட்டர் (Excavator) போலவே உள்ளது. ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டை நீங்கள் கீழே காணலாம்.
|
''தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்ற சொற்தொடர் இந்தியர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன். நமது பண்ணை மற்றும் கட்டுமான துறைகள் எக்ஸ்காவேட்டருக்கு மாற்றாக இந்த புதிய தயாரிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்'' எனவும் ஆனந்த் மஹிந்திரா அந்த பதிவில் கூறியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவிட்டர் பதிவால் பலரும் ஈர்க்கப்பட்டனர். இந்த கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ-டிவிட்களை ஆனந்த் மஹிந்திராவின் டிவிட் குவித்திருந்தது.
ஆனால் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? என்பது தெளிவாக தெரியவில்லை. இதே வீடியோவை சாதாரண நபர்கள் யாரேனும் பதிவிட்டிருந்தால் இவ்வளவு அதிகமான பேரை சென்றடைந்திருக்குமா? என்பதும் சந்தேகமே.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?